"கார்த்திக், சார் பார்க்கிறாரு. எழுந்திரு டா" என்றான் சிவா.
நான் முழிப்பதற்குள் அவர் என்னை கவனித்து விட, "Tell me the Second law of Thermodynamics" என்றார்.
"ஒன்னும் ஒன்னும் எத்தனை ன்னு கேட்டாலே இந்த நிலைமைல சொல்ல மாட்டான். இவன்கிட்ட போய் Second law of Thermodynamics கேட்கிறாரு பாரு" என்றான் அருள்.
"Two சார்" என்றேன்.
"What!!! 27 times imposition எழுதிட்டு வா" என்றார்.
"தேங்க்ஸ் சார்" அமர்ந்தேன் என்னிடத்தில். "அருள் தூங்கினாலும் ஒரு கேள்விக்கு சரியா பதில் சொல்லிட்டேன் பார்த்தியா" என்றேன்.
"இந்த கேள்விக்கு பதில் சொல்ல நீ எதுக்கு காலேஜ் ல வந்து உறங்கணும். LKG போ. போய் ஆயா மடியில படுத்து உறங்கு" என்றான் அருள். அனைவரும் சிரிக்க ஆரம்பிக்க என் உறக்கம் முழுதும் கலைந்தது.
"அருள் என்னடா ஸ்கூல் பசங்களுக்கு தர்ற மாதிரி imposition எழுத சொல்றாரு. அது என்னடா இருபத்தி ஏழு தடவை. அதான் எனக்கு புரியலை" என்றேன்.
அருளும் யோசித்துப் பார்த்தான். நாங்கள் இருவர் மட்டுமல்ல எல்லோரும் யோசிக்க ஆரம்பித்தோம். யாருக்கும் பதில் கிடைக்கவில்லை.
ஜூலை 5, முதல் ஆங்கில எழுத்துக்கள் இருபத்தி ஏழாக கூட்டப் படுகின்றது என்று ஒரு செய்தி இருந்தது. இருபத்தி ஏழாம் எழுத்தாக Heart Sybmol வரையப் பட்டிருந்தது.
எனக்கு பயங்கர ஆச்சரியம். ஒரு வேளை இந்த இருபத்தி ஏழுக்கும் சார் சொன்ன 27 times imposition க்கும் சம்பந்தம் இருக்குமோ? இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.
நாளை என் அக்கா மகள் கௌசல்யாவிற்கு இங்கிலீஷ் எக்ஸாம். ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு இந்த கேள்வி வந்தால் அவள் தவறாக விடை தந்து விடக் கூடாது என்று அக்காவை அழைத்தேன்.
"அக்கா, கௌசல்யா எக்ஸாமுக்கு படிச்சிட்டாளா? இன்னைக்கு ஹிந்து பார்த்தியா. இங்கிலீஷ் ல" சொல்லி முடிக்கும் முன் அக்கா குறுக்கிட்டாள்.
"மாமா இப்ப தான் டா பேப்பர் பார்த்துட்டு சொன்னாரு. நானும் மாமாவும் அவளுக்கு சொல்லி கொடுத்திட்டு இருக்கோம்" என்றாள்.
"சரிக்கா. நான் அப்புறம் கால் பண்றேன்" என்றேன்.
விளையாட்டுச் செய்திகள் பக்கம் சென்றேன். இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளை இருபத்தி ஏழு ஓவர்கள் போட்டிகளாக மாற்ற ICC முடிவு என்று இருந்தது.
என்ன எல்லாமே இருபத்தி ஏழு மயமா இருக்கே!! ஒன்றும் புரியாதவனாய் டிவி ஹால் பக்கம் சென்றேன். எல்லா சேனலிலும் மொக்கை நிகழ்ச்சிகளே ஓடிக் கொண்டிருந்தன. நட்சத்திர பலன் ஒரு சேனலில் ஓடிக் கொண்டிருக்க சரி நம்ம நட்சத்திரத்திற்கு என்னன்னு பார்ப்போம் என்று பார்க்க ஆரம்பித்தேன். ஜோதிட சிகாமணி ஒருவர் எதற்கு மொத்தம் இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் இருக்கின்றது என்று பேசிக் கொண்டிருந்தார். அடுத்த சேனல் சென்றேன். வானிலை அறிக்கை வாசித்துக் கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. இன்று இரவு பன்னிரண்டு மணி தொடங்கி அடுத்த இருபத்தி ஏழு மணி நேரம் தொடர்ந்து மழை பெய்யும் என்றார். இன்னைக்கு என்ன வானிலை அறிக்கை கூட வித்தியாசமா இருக்கே ஆச்சரியப் பட்டுக்கொண்டே ஹாஸ்டலை விட்டு வெளியே வந்தேன்.
வானில் அழகான வானவில் ஒன்று வரையப் பட்டிருக்க அதன் அழகை ரசித்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தேன். எப்பொழுதும் வானவில்லில் ஏழு வண்ணங்கள் மட்டும் இருக்கும் ஆனால் இன்று அதை விட அதிகமாக இருந்தது. எண்ண ஆரம்பித்தேன். எனக்கு தலை சுற்றியது. நான் சொல்லத் தேவை இல்லை வானவில்லிலும் இருபத்தி ஏழு நிறங்கள்.
செல் போனில் மெசேஜ் டோன் சத்தம் கேட்க மொபைலை எடுத்து மெசேஜை படிக்க ஆரம்பித்தேன். எனக்கு மயக்கமே வந்து விடும் போல இருந்தது. Special offer on tomorrow. Speak for 27 minutes and get 27 minutes free என்று இருந்தது.
சூரியன் மறையத் தொடங்கியது. நிலா அல்ல நிலாக்கள் உலா வர ஆரம்பித்தன இன்று. எதிரில் வந்து கொண்டிருந்த என் நண்பன் பிரேம் மச்சி என்னடா இன்னைக்கு நிறைய நிலா இருக்கு என்றான். இருபத்தி ஏழு இருக்கும் என்றேன். எண்ணிப் பார்த்தவன் எப்படி டா எண்ணாமலே கரெக்டா சொன்ன என்றான். எல்லாம் அப்படித் தான் என்றேன். வானைப் பார்த்து வியந்து கொண்டே சென்றான். வியந்தது அவன் மட்டுமல்ல நானும் தான்.
என் கல்லூரி மாணவர்கள் அனைவரும் அங்கும் இங்கும் பயத்தில் தலை தெறிக்க ஓடி கொண்டிருந்தனர். ஒருவனை நிறுத்தி என்ன ஆச்சு என்றேன். நம்ம காலேஜ் லைப்ரரில bomb வச்சுட்டாங்க யாரோ முழுதாக சொல்லி முடிக்கும் முன் ஓட ஆரம்பித்தான். இவன மாதிரி நாம பயந்து ஓடக் கூடாது. மனுசனா பிறந்தா எதையாவது சாதிக்கணும். bomb diffuse பண்ற வழியைப் பார்ப்போம் என்று முடிவெடுத்தேன். லைப்ரரி நோக்கி ஓட ஆரம்பித்தேன்.
bomb பற்றிய பயத்தில் இருபத்தி ஏழு மாணவர்கள் மயங்கி உள்ளே மாட்டிக் கொண்டதாக librarian கூறினார். இன்னும் இருபத்தி ஏழு நொடிகளே இருந்தன வெடிப்பதற்கு. என் ஒரு உயிரா அல்லது இருபத்தி ஏழு உயிரா!! யோசித்துப் பார்க்க கூட இது சரியான நேரம் இல்லை. bomb diffuse பண்ணுவதைத் தவிர வேறு வழி இப்போது இல்லை. அலாரம் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதன் ஒலி அதிகமாகிக் கொண்டே இருந்தது. bomb ஐ கையில் எடுத்தேன். snooze, off இரண்டு options இருந்தது.
அப்ப எல்லாமே கனவா!! அலாரத்தை ஆப் செய்தேன். எப்பொழுதும் இரண்டு மணிக்கு மேல் உறங்கும் நான் இன்று எப்படி சீக்கிரம் உறங்கினேன் என்று எனக்குத் தெரியவில்லை. மணியைப் பார்த்தேன் பன்னிரண்டாக இன்னும் இருபத்தி ஏழு நொடிகளே இருந்தன. காவ்யாவிற்கு கால் செய்தேன்.
ஒரு ரிங் அடித்து முடிக்கும் முன்னே எடுத்தாள். உன்னை நாளைக்கு திட்டிக்கிறேன் என்றாள்.
மணி சரியாக பன்னிரண்டு.
Happy Birthday Kavya.
வேறு சொல்ல நான் வாய் எடுப்பதற்குள் அவள் குறுக்கிட்டாள்.
எங்க 12 மணிக்கு நீ வாழ்த்து சொல்லாம போயிடுவியோன்னு பயந்துட்டே இருந்தேன் என்றாள். அவள் குரலில் இப்பொழுது மகிழ்ச்சியும் உற்சாகமும் இருந்தது.
நான் எப்படி மறப்பேன்? என்றேன்.
நீ!! இவ்ளோ நேரம் சார் என்ன பண்ணீங்க....? எத்தனை கால் பண்ணேன் தெரியுமா உனக்கு? என்றாள்.
உறங்கிட்டேன் டி என்றேன்.
காதலிக்கிற பொண்ணு பிறந்த நாள் அன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் உறங்கின ஒரே ஆள் நீ தான் டா. கடிந்து கொண்டாள்.
நான் ஒரு கேள்வி கேட்பேன். சரியா பதில் சொல்லிட்டன்னா நீ தப்பிச்ச. இல்ல செத்த மகனே என்றாள். இருபத்தி ஏழு தடவை உனக்கு கால் பண்ணி நீ எடுக்காம உறங்கின கோபத்துல இருக்கேன். இது என்னோட எத்தனையாவது பிறந்த நாள்? என்றாள்.
இருபத்தி ஆறு என்றேன் வேணுமென்றே.
அடப்பாவி உனக்கு clue கொடுத்ததும் நீ தப்பா சொல்ற. போ என்னோட பேசாத.
உன்னை சீண்டிப் பார்க்கத் தான்டி அப்படி சொன்னேன். எனக்கு வந்த கனவை அவளிடம் சொன்னேன்.
விழுந்து விழுந்து சிரித்தாள். அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இதுல பெரிய காமெடி நீ bomb diffuse பண்றதுன்னு முடிவு எடுத்தது தான் என்றாள். தெருல நாயைப் பார்த்தாலே பத்து அடி ஒடுவ நீ போய்....
போடி... சிரிக்காத.
கார்த்திக், இன்னைக்கு என் பிறந்த நாள். மத்தவங்க சொல்றதை விட நீ ஏதாச்சும் வித்தியாசமா சொல்லேன்.... என்றாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றேன்.
அப்பா சாமி நான் போனை வைக்கிறேன். நீ போய் உன் உறக்கத்தை continue பண்ணு என்றாள் சிறு கோபத்துடன்.
வைக்கப் போறேன்.. போறேன்.. வச்சிடவா என்றேன்.
போடா நான் என்ன கேட்கிறேன்னு உனக்குப் புரியலையா என்றாள் பாவமாக.
என்னது காவ்யா.... தெரியலையே!
ஒன்னும் இல்லை சாமி ஆளை விடு. குட் நைட் என்றாள் கோபத்துடன்.
Happy Birthday to the one who means the whole world to me. love you டி என் புஜ்ஜு குட்டி. என்றேன்.
ஒரு வழியா நான் கேட்கனும்னு ஆசைப்பட்டதை சொல்லிட்ட. இதை முதல்லயே சொல்ல வேண்டியது தான? I love you karthik என்றாள்.
அது எப்படி....? உன்னை சீண்டிப் பார்க்கிறதுல ஒரு சின்ன சந்தோஷம். நீ செல்லமா கோபப்படும் போது எவ்ளோ அழகா இருக்கு தெரியுமா....
இருக்கும்ல. எனக்கு ஒரே ஒரு ஆசை டா. என்னோட அடுத்த பிறந்த நாள்ல உன்னோட காதலியா மட்டும் இல்லாம உன்னோட மனைவியாவும் இருக்கணும். Missing you a lot da என்றாள்.
நானும் தான் டி. கண்டிப்பா உன் ஆசை நிறைவேறும். உன்னோட பிறந்தநாள் ஆசை வேற அதனால கண்டிப்பா அடுத்த பிறந்த நாள் அன்னைக்கு நீ என் பொண்டாட்டியா இருப்ப என்றேன்.
ஹ்ம்ம்.
சரி டி. நீ போய் உறங்கு. நாளைக்கு கூப்பிடுறேன் என்றேன்.
என்ன சார் சொன்னீங்க. உறங்கவா.... இன்னைக்கு புல்லா உறங்கப் போறது இல்ல. அடுத்த இருபத்தி ஏழு மணி நேரம் நீ என் கூட மட்டும் பேசிட்டே இருக்கணும் என்றாள்.
நன்றி: கவிஞர் விமர்சகர் பொன். குமார் அவர்கள்
-
*சூரரரைப் போற்று - *மகாகவி பாரதியார் புதிய ஆத்திசூடி தன்முனைக் கவிதைகள்* -
நெல்லை அன்புடன் ஆனந்தி - ஒரு பார்வை - பொன். குமார்*
தமிழ் மூதாட்டி ஒளவையார் முதன...
கவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )
-
இறுக்கத்தின் விளை நிலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டி தீர்த்திருக்கிற அருவியின்
"கவனிக்க மறந்த சொற்களை" தான் இவ்வளவு சாதாரணமாக ஒரு தொகுப்பாக்கி
இருக்கிறார்...
"காவடி பாக்க போவோம்."- தைப்பூசமும் பரோட்டாவும்
-
Farrer park ரயில் நிலையம் அருகே இருக்கும் பெருமாள் கோயிலிருந்து Tank Road
முருகன் கோயில் வரை தைப்பூசம் ஊர்வலம் போகும் சிங்கப்பூரில். விமர்சையாக
நடைபெறும் ப...
💗திரும்புதல் அல்லது நினைவுகளை புதுப்பித்தல்.💗
-
*உயர்தரத்து பரீட்சைக்கு *
*ஒரு தவம் போல படித்துக்கொண்டிருப்பாய் - நீ*
*மேசையில் உறங்கிப்போகும் உன்னை தவம் போல பார்த்துக்கொண்டிருப்பேன் - நான்*.
நாடு முழுவ...
கவிதைகளல்லாதவை - 1.1
-
என்னை கவிஞனென
நிரூபிக்க பட்டாம்பூச்சிகளையும்
சில இறகுகளையும்
சேகரித்து வந்தால் போதுமென்று நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறீர்கள்
நானோ
அது எதுவமறியாமல...
கடலோரக் கவிதைகள்
-
பிரியத்தின் பேரழகி !
இன்று கோவளம் கடற்கரைக்குச் சென்றிருந்தேன். நேற்றிரவே யாருமில்லாக்
கடற்கரையில் போய்த் தனியாக உட்கார்ந்து கொண்டு நீண்ட நேரம் உன்னை நி...
வழக்கம் போல்.
-
என் இரவுகளுக்கும்
உன் நினைவுகளுக்கும்
தூக்கமே இல்லை..
நடு இரவின் ஒத்திகைகளை
சேமித்த வசனங்களை
என்னால் ஒப்புவிக்க
முடியவில்லை..,
மௌனமாய் சிர...
விதியின் வினை
-
நீ வேண்டாம் என்று உன் நினைவாக இருந்த சின்னம் யாவையும் அழித்தேன்- ஆனால்உன்
நினைவு என் உள்ளத்தில் அழியாத ரணமாய் என்னைக் கொல்கிறது..அதை எப்படி
அழிப்பது,... என...