Pages

Thursday, July 15, 2010

மதராசப்பட்டிணம் - பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே



மதராசப்பட்டிணம் - இந்த படத்தை பற்றி விமர்சனம் செய்ய நான் தகுதியான ஆள் இல்லை. A class movie. இந்த பாட்டின் மீது எனக்கு பைத்தியமே பிடித்துவிட்டது. பாட்டிற்கு முன்
வருகின்ற சீனைப் பற்றி சொல்ல வார்த்தை இல்லை. எனக்குள் ஒரு இனம் புரியாத சந்தோசத்தை தந்தது. பாடலைப் பாடியவர் எனக்கு மிகவும் பிடித்த ரூப் குமார் ரத்தோட். "வெண்மதி வெண்மதியே நில்லு - மின்னலே", "ஒரு தேவதை - வாமனன்" பாடல்களின் குரலுக்கு சொந்தக்காரர். 'விஜய்' என்று பெயர் வைத்துக் கொண்டு இப்படி ஒரு அழகான காவியத்தை தந்த இயக்குனருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்குள்.

பாடல் வரிகள் இதோ,

பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

பார்த்ததாரும் இல்லையே
உலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
நேற்று வரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது என்னவோ
இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே...

ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ

வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழி பேசுமே
நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே
வேர் இன்றி விதை இன்றி விண் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே
வாள் இன்றி போர் இன்றி வலிக்கின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே
இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம்
எங்கு கொண்டு நிறுத்தும்
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்

பூந்தளிரே......

ohh where would I be
without this joy inside of me
it makes me want, to come alive
it makes me want to fly
into the sky...
ohh where would I be
if I didn't have you next to me
ohh where would I be
ohh where...
ohh where...

எந்த மேகமிது எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழை தூவுதே
என்ன உறவு இது எதுவும் புரியவில்லை
என்ற போதும் இது நீளுதே
யார் என்று அறியாமல்
பேர் கூட தெரியாமல் இவளோடு ஒரு சொந்தம் உருவானதே
ஏனென்று கேட்காமல் வருங்காலம் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே
பாதை முடிந்த பிறகும்
இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்
இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே

இது எதுவோ ....

பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே
பார்த்ததாரும் இல்லையே
உலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
நேற்று வரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே
என்ன புதுமை.
இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே
இது எதுவோ...

படம்: மதராசப்பட்டிணம்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: GV பிரகாஷ், ரூப்குமார் ரத்தோட், ஹரிணி, ஆண்ட்ரியா

0 comments:

Post a Comment