Pages

Friday, December 31, 2010

விழி நீர்

என் விழிகள்
சிந்துவது

கண்ணீர் அல்ல....

காதல்.

பிடித்த பத்து பெண்குரல் பாடல்கள் (தொடர்பதிவு)

என்னை இந்த தொடர்பதிவுக்கு அழைத்த தங்கை லாவண்யா அவர்களுக்கு நன்றிகள் பல. இந்த பத்துப் பெண் குரல் பாடல்கள் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றால் அது பொய். தங்கை பத்து பாடல்கள் தான் எழுத வேண்டும் என்று சொல்லியதால் பத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். இந்த பாடல்களை என் வாழ்வில் கிடைத்த மூன்று பொக்கிஷங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அவர்கள் யார் என்று தெரிய வேண்டுமா???? இங்கே செல்லுங்கள்.

சரி என்னைக் கவர்ந்த பத்துப் பாடல்களை பார்ப்போமா....


10. பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா

பத்தாவதாய் இருப்பதால் இந்த வரிசையில் தான் எனக்கு பாடல்கள் பிடிக்கும் என்பது தவறு. எனக்கு விவரம் தெரிந்த வயதில் இருந்து இந்தப் பாடல் தான் தாலாட்டுப் பாடல். என்னையும் என் தங்கையும் இந்தப் பாடலைப் பாடித் தான் உறங்க வைத்தார் என் அம்மா. ஜானகி பாடியது என்றாலும் என் மனதில் நிற்பது என் அம்மாவின் குரல் தான்....

எந்நாளும் நம்மை விட்டு போகாது வசந்தம்
தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்
தள்ளாடும் பூக்கள் எல்லாம் விளையாட அழைக்கும்
ஏதேதோ ஏழை மனம் நினைக்கும்

படம்: நீங்கள் கேட்டவை
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி
வரிகள்: வாலி

9. நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்

இந்தப் பாடலை பற்றி என்ன சொல்ல!!!! முதலில் எனக்கு பிடிக்காத பாடலாய் தான் இருந்தது. நம் மனதிற்கு ஒருவரை பிடித்துவிட்டால் அவர்களுக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அது நமக்கும் பிடிக்கும் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. இப்பொழுது தெரிந்திருக்க வேண்டும் இந்தப் பாடல் பிடித்ததற்கான காரணம்.


பெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு
என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு
இன்றல்ல நேற்றல்ல காலம்தோறும்
உன்னோடு பின்னோடும் காதல் நெஞ்சம்

படம்: அக்னி நட்சத்திரம்
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா

வரிகள்: வாலி

8. உப்பு கல்லு தண்ணீருக்கு

தாய்மை உணர்வுடன் உள்ள ஒரு காதல் என்பது தான் இந்தப் பாடல் என்னை மிகவும் கவரக் காரணம். பாம்பே ஜெயஸ்ரீ எனக்கு மிகவும் பிடித்த பாடகிகளில் ஒருவர். இந்தப் பாடலால் எனக்கு இந்தப் படமும் பிடிக்கும் என்பது கூடுதல் தகவல்.

கத்தியின்றி ரத்தமின்றி காயம்பட்டவள்
உன் கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மை அடைகிறேன்

கட்டில் உண்டு மெத்தை உண்டு ஆன போதிலும்
உன் பாசம் கண்டு தூங்கவில்லை எனது விழிகளே

படம்: கருப்பசாமி குத்தகைதாரர்
இசை: தினா
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
வரிகள்: யுகபாரதி

7. விடிகின்ற பொழுது தெரிந்திடுமா

இந்தப் பாடலில் வரும் ஹம்மிங் தான் என்னை முதலில் கவரக் காரணம். அடுத்து பாடல் வரிகள். பாடலில் உள்ள எல்லா வரிகளுமே மிக அருமை. யுவன் என்னைக் கவர்ந்தது இந்தப் படத்தின் பாடல்கள் மூலம் தான் என்று சொனனால் மிகையல்ல.

உன்னாலே எனக்குள் உருவான உலகம்
பூகம்பம் இன்றி சிதறுதடா
எங்கேயோ இருந்து நீ தீண்டும் நினைவே
எனை இன்னும் வாழ சொல்லுதடா

காட்டு தீ போல கண்மூடித்தனமாய்
என் சோகம் சுடர் விட்டு எறியுதடா
மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம்
வாய் பொத்தி வாய் பொத்தி கதறுதடா
யாரிடம் உந்தன் கதை பேச முடியும்
வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்

படம்: ராம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: மதுமிதா
வரிகள்: சினேகன்

6
. கண்ணாளனே எனது கண்ணை

இந்தப் பாடல் பிடித்ததற்கான காரணம் பற்றி அறிய ஒன்பதாவது பாட்டிற்குச் செல்லுங்கள். மிக அற்புதமான படமும் கூட. இந்த மாதிரி ஆயிரம் படம் வந்தாலும் நம்மவர்கள் திருந்த மாட்டார்கள். விடுங்க மணி சார், இவனுங்க எப்பவும் இப்படித் தான் அடிச்சுகிட்டே இருப்பாங்க.

என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
உன்னை இழந்துவிட்டால் எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை
இது கனவா இல்லை நினைவா
என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்
உன்னைப் பார்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்

படம்: பம்பாய்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்:
சித்ரா
வரிகள்: வைரமுத்து

5. மனம் விரும்புதே உன்னை

இந்தப் பாடல் பிடித்ததற்கான காரணமும்....


அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது

சட்டென்று சலனம் வருமென்று ஜாதகத்தில் சொல்லலயே
நெஞ்சோடு காதல் வருமென்று நேற்றுவரை நம்பலயே

படம்: நேருக்கு நேர்
இசை: தேவா
பாடியவர்: ஹரிணி
வரிகள்: வைரமுத்து

4. மன்மதனே நீ கலைஞன் தான்

இந்தப் பாடலை ஆண் பாடுவது போல தான் நான் எப்பவும் பாடுவேன். குறிப்பாக இந்த வரிகள்.... "எத்தனை பெண்களை கடந்து வந்தேன். எவளையும் பிடிக்கவில்லை. இருபது வருடம் உன்னை போல் எவளும் என்னை மயக்கவில்லை"


எத்தனை ஆண்களை கடந்து வந்தேன்
எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம் உன்னை போல் எவனும்
என்னை மயக்கவில்லை

நானும் ஓர் பெண்ணென

பிறந்த பலனை இன்றே தான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்த பின்
ஆண்கள் வர்க்கத்தை நானும் மதித்தேன்

அடிமை சாசனம் எழுதி தருகிறேன், என்னை ஏற்று கொள்ள

ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன், அன்பாய் பார்த்து கொள்ள

படம்: மன்மதன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: சாதனா சர்கம்
வரிகள்: சினேகன்

3. நினைத்து நினைத்து பார்த்தால்


பெண் குரலில் எனக்கு மிகவும் பிடித்த சோகப் பாடல். தனிமையில் இந்தப் பாடலைக் கேட்டால் கண் கலங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. இப்பாடலை கேட்கும் போதெல்லாம் மனதில் ஏற்படும் வலியை உணர்த்த வார்த்தைகள் என்னிடத்தில் இல்லை.


தோளில் சாய்ந்து கதைகள் பேச
நமது விதியில் இல்லை
முதல் கனவு போதுமே காதலா
கண்கள் திறந்திடு

படம்: 7/G ரெயின்போ காலனி
இசை: யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்: ஷ்ரேயா கோஷல்
வரிகள்: நா முத்துக்குமார்

2. மாலை நேரம் மழைத் தூறும் காலம்

என் தனிமையை ரசிக்க மிகவும் உதவும் பாடல் இது என்று தான் நான் சொல்லுவேன். இன்றும் நினைவிருக்கிறது சென்னையில் நைட் ஷிப்ட் முடிந்து திரும்புகையில் ஆபீஸ் கேபில் இரவு 12.45 மணிக்கு காற்றலையில் இப்பாடல் மிதந்து வந்தது. அந்த ஐந்து நிமிடத் தனிமை எனக்கு தந்த சுகம் என் வாழ்வில் மறக்க முடியாதது.

இது சோகம் னால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்

நாம் பழகிய காலம் பரவசம்
அன்பே...

உன் கரம் கோர்க்கையில்

நினைவு ஓராயிரம்

பின் இரு கரம் பிரிகையில்

நினைவு நூறாயிரம்..


காதலில் விழுந்த இதயம்

மீட்கமுடியதது..

கனவில் தொலைந்த நிஜங்கள்

மீண்டும் கிடைக்காதது..


ஒரு காலையில் நீ இல்லை

தேடவும் மனம் வரவில்லை

பிரிந்ததும் புரிந்தது

நான் என்ன இழந்தேன் என ...


படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: ஜி வி பிரகாஷ் குமார்
பாடியவர்: ஆண்ட்ரியா
வரிகள்: செல்வராகவன்

1. என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு


இது திரைப்பாடல் அல்ல. இருந்தும் பல வெள்ளித்திரைப் பாடல்கள் ஏற்படுத்தாத ஒரு உணர்வை இப்பாடல் எனக்குள் ஏற்படுத்தியது என்று தான் சொல்லுவேன்.


என்னிடத்தில் தேக்கிவைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வரத் தெரியவில்லை
காதலதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லியனுப்பு

யாரோ..

உன்காதலில் வாழ்வது யாரோ..
உன் கனவினில் நிறைவது யாரோ..
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ..
ஏனோ...
என் இரவுகள் நீள்வது ஏனோ..
ஒரு பகல் எனச் சுடுவதும் ஏனோ..
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ..

தொடர்: காதலிக்க நேரமில்லை
இசை: விஜய் ஆண்டனி

பாடியவர்: சங்கீதா
வரிகள்: தேன்மொழிதாஸ்

இவ்வளவு நேரம் மிகப் பொறுமையாக இந்த பதிவை வாசித்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்.


இந்தப் பதிவைத் தொடர நான் அழைக்க விரும்பும் நபர்,

1. ரேவா(ரேவா கவிதைகள்)

Saturday, December 25, 2010

உறங்காத கண்கள்

உன் நிழலைக் கூட
பார்க்காததால்
என் கண்கள்
உறங்க மறுக்கின்றன.
அவை மூடும் முன்
ஒரு முறையாவது
காட்சி அளித்துவிட்டு போ.
சொர்க்கத்திலாவது
அவை உறங்கட்டும்....

Thursday, December 23, 2010

விடியாத இரவு

ஒவ்வொரு நாளும்
விடியாத இரவை
நோக்கி காத்திருக்கிறது
என் உறக்கம்.
கனவாய் நீ.

Wednesday, December 22, 2010

மறுஜென்மம்

மறுஜென்மத்திற்கு
எத்துனை மணித்துளிகள்
நாம் காத்திருக்க
வேண்டுமென நீ
சொல்லி இருந்தால்
நம் சின்ன சின்ன
பிரிவுகளின் காத்திருப்பை
போல இப்பிரிவும்
இனிமையாய் இருந்திருக்கும்.

Monday, December 13, 2010

காதல்

மதியாய்
என் வானில் நீ.

மதி கெட்டு

இப்பூமியில் நான்....

Thursday, December 09, 2010

வேண்டும் ஒரு வரம்

வேண்டும் ஒரு வரம்!
உன் காதலை
என் கருவில் சுமக்க..
அப்படியாவது,
என் பாசமும்

தாய் அன்பிற்கு
இணையானது
என்று
இவ்வுலகம் அறியட்டும்.

Sunday, December 05, 2010

நீயா நானா

நவம்பர் 24, 2010, BTM அடையார் ஆனந்த பவன்:

"கார்த்திக், இந்த வாரம் சனிக்கிழமை சிவன் கோவில் போகலாம்டா பிரதோஷம் அன்னைக்கு" என்றாள் காவ்யா.

'ஹே சொல்ல மறந்துட்டேன் லூசு அம்மாவும் தங்கச்சியும் இந்த வாரம் பெங்களூர் வர்றாங்க ஊர்ல இருந்து. அதனால..'

"அதனாலென்ன??"


'அவங்கள எங்கயாவது வெளிய கூட்டிட்டு போகணும். உன்னோட வெளிய வர முடியுமான்னு தெரியல'

"ஹ்ம்ம். சரி என்னைப் பத்தி எப்ப அம்மாட்ட பேசப் போற?"

'அவங்க கிளம்புறதுக்குள்ள உன்னைப் பத்தி கண்டிப்பா சொல்லிடுவேன். உன்னையவே நேர்ல போய் நிறுத்திடுறேன். போதுமா?'

"ஹ்ம்ம். பார்க்கத் தான போறேன் என்ன பண்ணப் போறன்னு.."


நவம்பர் 26, இரவு 11 மணி,

"காவ்யா அம்மா தங்கச்சி ரயில் ஏறிட்டாங்க. S9 34, 36. நான் மறந்தாலும் மறந்திடுவேன் நீயும் ஞாபகத்துல வச்சுக்கோ"

"காலைல போன் பண்ணி எங்க இருக்காங்கன்னு கேட்டுக்கோ அவ்வளவு தான??"


'இல்லடி. மொபைல் இல்ல அவங்கள்ட்ட. காலைல அவங்க ஏதாச்சும் போன் பூத்தை தேடிட்டு இருக்கணும். அதான் நானே நேர்ல வர்றேன்னு சொல்லிட்டேன். அவங்களை அங்கேயே இருக்கச் சொல்லி இருக்கேன்'

"ஹ்ம்ம். சரி டா"


'சரி காவ்யா. நான் இன்னைக்கு சீக்கிரமா உறங்கப் போறேன். இல்லைன்னா காலைல எந்திரிக்க முடியாது. காலைல என்னைய 5.30 க்கு எழுப்பி விட்டுடு'

"இன்னும் கொஞ்ச நேரம் என்னோட பேசிட்டுப் போடா. ரெண்டு நாள் அத்தை, நாத்தனாரை பார்த்ததும் என்னைய நீ மறந்திடுவ. அதுக்கெல்லாம் சேர்த்து இப்ப என்கிட்ட நீ பேசணும்" செல்லமாக சிணுங்கினாள்.

'சரி டி. ஆனால், ரெண்டு நாளுக்கும் சேர்த்து பேசணும்னா விடிய விடிய பேசினாக் கூட பத்தாதே'


"ஐடியா டா. நீ என்கிட்ட பேசிட்டே இரு. டைம் ஆனதும் ஸ்டேஷன் கிளம்பிடு. எப்படி??"

சிரித்தேன்.


நன்றாக உறங்கிக் கொண்டிருதேன். காலிங் பெல் சத்தம் கேட்டு முழித்தேன். கதவைத் திறந்தால்...

'அம்மா, ஸ்வாதி நீங்க எப்படி இங்க? எப்படி வந்தீங்க? அலாரம் வச்சேன் ஏன் அடிக்கலைன்னு தெரியல!!' என்று உளறிக் கொண்டிருக்கையில் காவ்யாவும் உள்ளே நுழைந்தாள்.


"யாருடா இந்தப் பொண்ணு??" - அம்மா.

'அம்மா அது.. அது வந்து.. என்னோட வேலை பார்க்கிற பொண்ணும்மா. என் பிரண்ட்.' என்று சொல்லி முடிப்பதற்குள் என் தங்கை ஸ்வாதி சிரிக்க ஆரம்பித்தாள்.

'ஏன் ஸ்வாதி சிரிக்கிற?' என்று அவளிடம் கேட்டேன். அவள் நடந்ததை சொன்னாள்.

காலை 6 மணி, பெங்களூர் ரயில் நிலையம் :

"கார்த்திக் ஆபீஸ் முடிஞ்சு வர ரொம்ப லேட் ஆயிடுச்சு. அவன் உறங்கிட்டு இருக்கான். அதான் என்னை அனுப்பினான்" - காவ்யா.

"ஓ அப்படியாம்மா. என் புள்ளை விடிய விடிய உழைச்சு இப்ப துரும்பா இளைச்சு போயிருப்பானே. சரி நீ யாரும்மா அவனோட வேலை பார்க்கிறியா? அவன் பிரண்டா?" - அம்மா.

"முதல்ல பிரண்டா மட்டும் தான் இருந்தேன். இப்ப அதுக்கும் மேல" - காவ்யா.

அதுக்கும் மேலன்னா என்னடி அர்த்தம் என்று அம்மா ஸ்வாதியிடம் கேட்க, "உனக்கு புரியலையா இல்லை புரியாத மாதிரி நடிக்கிறியாம்மா" என்று அம்மாவிடம் பதில் சொல்லி விட்டு, "வாங்க மதினி நாம அண்ணன் வீட்டுக்குப் போவோம் என்று ஸ்வாதி சொல்ல அம்மாவிற்கு எல்லாம் புரிந்தது.

வரும் வழியில்,

"என்னடி சொல்ற?? மதினியா!! என் சம்மதம் இல்லாம உங்க அண்ணன் எப்படி இவளை கல்யாணம் பண்றான்னு பார்க்கிறேன்" - அம்மா.

"ஸ்வாதி, அத்தைக்கு கார்த்திக் கல்யாணம் பார்க்க கொடுத்து வைக்கல போல. நீயாவது வந்திடு" - காவ்யா.

"எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு மதினி. நான் கண்டிப்பா வர்றேன்" - ஸ்வாதி.

நடந்ததை கேட்டு எனக்கு மயக்கமே வந்தது. காவ்யாவை நான் முறைக்க அம்மா என்னை முறைத்துக் கொண்டிருந்தாள்.


'அம்மா காவ்யா உன்னை மாதிரியே ரொம்ப நல்லவா அம்மா. அவள்ட்ட பேசிப் பார்த்தா உங்களுக்கும் அவளை பிடிக்கும்மா..' என்றேன்.

"ஹ்ம்ம்" மட்டுமே அம்மாவின் பதிலாய் வந்தது.


ஐந்து நிமிடங்களில் காபி ரெடி செய்தாள் காவ்யா. "காபி குடிச்சிட்டு நீங்க போய் ரெஸ்ட் எடுங்க. ரெண்டு நாள் சமையல் கட்டு பக்கமே நீங்க ரெண்டு பேரும் வரக் கூடாது" என்றாள் காவ்யா.

அம்மா எதுவும் பேசவில்லை.


"ஸ்வாதி நீங்க இன்னைக்கு கறி சாப்பிடுவீங்கள்ள? உங்களுக்கு கறி சமைக்கவா?" - காவ்யா

"ஒரு நிமிஷம் மதினி. அம்மாக்கிட்ட கேட்கிறேன்"

"மதினி இன்னைக்கு பிரதோஷம். அதனால கறி வேணாம்னு சொல்றாங்க. உங்களுக்கு சமைச்சுக்கோங்க மதினி" - ஸ்வாதி.

"இல்லை ஸ்வாதி. நான் எந்த வெள்ளி சனியும் அசைவம் சாப்பிட மாட்டேன்" - காவ்யா.


"ஓ இதான் விசயமா!! இதனால தான் எங்க அண்ணனும் இப்ப எல்லாம் வெள்ளி சனி சைவமா மாறிட்டானா" என்று ஸ்வாதி சொல்ல காவ்யாவின் கண்களில் சந்தோஷம் தெரிந்தது, ஆனால் அம்மாவும் கண்களோ என்னை முறைத்துக் கொண்டிருந்தது.

அம்மா என்னிடம் வந்து சிவன் கோவிலுக்குப் போக வேண்டும் என்று சொல்லி கொண்டிருந்தாள். காவ்யா அந்நேரம் வர, "அத்தை நானும் அன்னைக்கே சொன்னேன் சிவன் கோவிலுக்குப் போனும்னு. நீங்க கிளம்பி ரெடியா இருங்க. நான் என் ரூம்ல போய் கிளம்பிட்டு வர்றேன். நாம எல்லாரும் சேர்ந்தே போவோம் கோவிலுக்கு" என்றாள் காவ்யா.


1 மணி நேரம் கழித்து வந்தாள் காவ்யா. நீல நிறப் புடவை அணிந்து இருந்தாள். நான் வைத்த கண் வாங்காமல் அவளை பார்த்துக் கொண்டிருந்ததை அம்மா கவனித்து விட்டாள்.


"மதினி, சுடிதார் ல ஒரு அழகா இருக்கீங்க. சேலைல ரொம்ப ரொம்ப அழகா தேவதை மாதிரி இருக்கீங்க. எங்க அண்ணன் கொஞ்சம் கம்மி தான் உங்களுக்கு" என்று ஸ்வாதி சொல்ல, அம்மா "என் பையனுக்கு என்னடி. அவனை கட்டிக்க ஐஸ்வர்யா ராயை விட அழகிகள் எல்லாம் காத்துக் கிடக்காங்க" என்றாள். "உன் பையனை கட்டிக்க!!! காமெடி பண்ணாதம்மா ஊரு விட்டு ஊரு வந்து" என்றாள் ஸ்வாதி.

நானும் காவ்யாவும் எதுவும் பேசவில்லை. நால்வரும் வண்டியில் புறப்பட்டோம். "வண்டியில மெதுவாப் போ கார்த்திக். ஒன்னும் அவசரமில்ல" என்று அம்மா எப்பவும் போனில் சொல்வதை காவ்யா நேரில் சொன்னாள். அம்மாவின் கண்களில் முதல் முறை ஒரு மாற்றம் தெரிந்தது. கெம்ப்போர்ட்டை வந்தடைந்தோம். "ஸ்வாதி இந்த கோவில் தான் தீபாவளி படத்துல போகாதே பாட்டுல வரும்" என்று என் தங்கையிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் காவ்யா. என் தங்கையும் காவ்யாவும் சிறிது நேரத்திலேயே நெருங்கிப் பழக ஆரம்பித்தது எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது ஏனென்றால் ஸ்வாதி யாரிடமும் அவ்வளவு எளிதாகப் பேசிட மாட்டாள்.


கோவிலில் இருந்து புறப்பட்டோம். "காவ்யா அம்மா, ஸ்வாதியை கூட்டிட்டு ஷாப்பிங் போகலாம்" என்றேன். "கார்த்திக் நானும் இதை தான் சொல்ல வந்தேன் நீ முந்திட்ட" என்றாள். கிருஷ்ணா கலெக்சன்ஸ் சென்றோம். அம்மா, தங்கைக்கு சாரி எடுத்துக் கொடுத்தாள். நானும் அம்மாவிற்கு சாரியும் தங்கைக்கு சுடிதாரும் எடுத்தேன். Forum சென்றோம் அடுத்து. நானும் அம்மாவும் Landmark ல் தமிழ் புத்தகங்கள் பார்த்துக் கொண்டிருக்க ஸ்வாதியை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள். அரை மணி நேரம் ஆகியும் இருவரும் திரும்ப வரவில்லை.

காவ்யாவிற்கு போன் செய்தால் என்னையும் அம்மாவையும் PVR classic அருகே வரச் சொன்னாள். நாங்கள் அங்கே சென்று பத்து நிமிடங்கள் கழித்து இருவரும் வந்தனர். ஸ்வாதி கையில் ஒரு புது மொபைல் போன் Sony Ericsson ELM. "அண்ணா, உனக்கு கூட இது தோனலை இது வரை" என்று கோபித்துக் கொண்டாள் ஸ்வாதி. அவள் சொல்வது உண்மை தான். என் முகம் வாடிப் போவதை பார்த்த காவ்யா, "கார்த்திக் போன வாரமே சொல்லிட்டு இருந்தான் வீட்டுக்கு மொபைல் வாங்கனும்னு. நான் வாங்கிக் கொடுத்தா என்ன, உங்க அண்ணன் வாங்கிக் கொடுத்தா என்ன? எல்லாம் ஒன்னு தான் ஸ்வாதி" என்று என்னை விட்டுக் கொடுக்காமல் பேசினாள். அம்மா ஏதாச்சும் பேசுவாள் என்று எதிர்பார்த்தேன். அம்மாவின் அமைதி தொடர்ந்தது.

"கார்த்திக் படம் பார்த்துட்டு வீட்டுக்கு போலாமா?"
என்றாள் காவ்யா. 'அம்மா, இங்க எந்திரன், உத்தம புத்திரன் தவிர வேற எந்த படமும் ஓடல. எந்தப் படம் போகலாம்?' என்று அம்மாவிடம் கேட்க "உத்தம புத்திரன் குடும்பப் படமா இருக்கும் அதுக்கே போலாம் பா" என்றாள். படம் முடிந்து அனைவரும் வீட்டுக்குப் புறப்பட்டோம். வரும் வழியில், ஸ்வாதி "அண்ணா, நீ எப்படி மதினிட்ட propose பண்ண?" என்று கேட்டாள். அதற்கு காவ்யா தான் பதிலளித்தாள். "உங்க அண்ணன் உங்க அம்மாகிட்ட என்னை லவ் பண்றத சொல்லவே இவ்வளவு பயப்படுறான். என்கிட்ட சொல்லிருப்பான்னு நினைக்கிற?" என்று சொன்னாள். இருவரும் நிறுத்தாமல் சிரித்துக் கொண்டிருந்தனர். அந்நேரம் நாங்கள் BTM cricket ground ஐ கடந்து கொண்டிருந்தோம். காவ்யா சொல்வதைப் போல எனக்கு அவளை ரொம்ப பிடித்து இருந்தாலும் அவளிடம் என் காதலை சொல்ல மட்டும் தைரியம் வரவே இல்லை. ஒரு வேளை அன்று காவ்யாவும் சொல்லாமல் இருந்திருந்தால் காவ்யா என்னை வாழ்க்கையில் இழந்திருப்பதை விட நான் தான் என் வாழ்வில் காவ்யா என்னும் தேவதையை தொலைத்து இருப்பேன்.

ஆகஸ்ட் 6, 2009 BTM cricket ground காலை 5.34 மணி

நானும் காவ்யாவும் jogging செய்து கொண்டிருந்தோம்.

"கார்த்திக், உங்கிட்ட முக்கியமான விஷயம் ஒன்னு சொல்லணும்"

'சொல்லு காவ்யா'

"க்ரிஷ் என்னை லவ் பண்றதா சொல்றான்"

என் மனம் அந்த நொடி உடைந்து போனது. இருந்தாலும் எதையும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் 'நீ என்ன பதில் சொன்ன?' என்றேன்.

"என்ன சொல்லிருப்பேன்னு நினைக்கிற?"

'தெரியல. உன் வாழ்க்கை நீ தான முடிவு பண்ணனும். நல்லா பையனா இருந்தா நீ... '

"தெரியும் டா நீ இதை தான் சொல்லுவேன்னு. அவனை பிடிச்ச்சிருந்தா நான் எதுக்கு டா பெங்களூர் குளிர்ல காலங்காத்தால இப்படி உன்கூட ஓடிட்டு இருக்கப் போறேன். என்னால இதுக்கு மேல வெயிட் பண்ண முடியல டா. உனக்கும் என்னை பிடிக்கும்னு தெரியும். நீ சொல்லுவன்னு பார்த்தேன். ஆனால்.."

அவள் சொல்லி முடிப்பதற்குள் 'இன்றாவது என் காதலை சொல்லிவிட வேண்டும் என்று தினமும் கொண்டு வந்தும் தராமலே திரும்ப எடுத்துச் செல்லப்படும் Greeting Card' ஐ சேர வேண்டிய இடத்தில் சேர்த்தேன்.


வீட்டை வந்து சேர்ந்தோம். 'அத்தை, ஸ்வாதி நான் நாளைக்கு வர்றேன்' என்று சொல்லிவிட்டு புறப்பட்டாள் காவ்யா. அம்மா இப்பொழுது பேச ஆரம்பித்தாள்.

"காவ்யாவை.."

காவ்யாவை எனக்கு பிடிச்சிருக்கு என்
று சொல்லப் போகிறாள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால்..

"கார்த்திக் மணி 9 ஆயிடுச்சு. நீயும் காவ்யா கூட அவா வீட்டு வரைக்கு போயிட்டு வாப்பா" என்றாள்.

'சரிம்மா' என்று பதில் அளித்து விட்டு காவ்யாவுடன் புறப்பட்டேன்.

காவ்யா வீட்டுத் தெரு:

"கார்த்திக் ரொம்ப அதிகமா ஏதாச்சும் பேசிட்டேனா? இல்ல அதிகப் பிரசங்கித்தனமா ஏதாச்சும் பண்ணிட்டேனா. நீ சொல்றதுக்குள்ள நானே அவசரப்பட்டு சொல்லிட்டேன்னு கோபமா என் மேல?"

'உன் மேல கோபம் இல்லடி. அம்மாகிட்ட எப்படி நம்ம காதலை பத்தின பேச்சை ஆரம்பிக்கிறதுன்னு ரொம்ப யோசிச்சிட்டு இருந்தேன். நீயே சொன்னது ஒரு விதத்துல நல்லது தான்டி'

"அம்மா என்னை பத்தி என்ன சொன்னாங்க"

'இது வரை ஏதும் சொல்லலை. ஆனால் நம்பிக்கை இருக்குடி. இந்த உலகத்துல உன்னை பிடிக்காதவங்க யாருமே இருக்க முடியாது'

"கொஞ்சம் பயமா இருக்கு டா என்ன நடக்கப் போகுதோன்னு. அவங்க என்னைப் பத்தி எதுவுமே சொல்லலைன்னா நானே கேட்கப் போறேன்டா என்னை பிடிச்சிருக்கா இல்லையான்னு"

'உலகத்துல என்னை பிடிச்சிருக்கான்னு பையனோட அம்மாகிட்ட கேட்கிற முதல் பொண்ணு நீயா தான்டி இருக்கப் போற'

சிரித்தாள்.

"சரி கார்த்திக் நீ கிளம்பு. டைம் ஆயிடுச்சு. நாளைக்கு மீன், கறி எல்லாம் வாங்கி வச்சிடு. நான் வந்து சமைக்கிறேன் அம்மாவை வேலை செய்ய வைக்காத"

'சரிடி. நான் கிளம்புறேன். நாளைக்குப் பார்ப்போம்' என்று சொல்லிவிட்டு புறப்பட்டேன்.

நவம்பர் 28 :

Fish fry, சிக்கன் என்று சமைத்து அசத்தினாள் காவ்யா. இன்று எங்கேயும் வெளியே போகததால் சாப்பிட்டு ஒரு குட்டி உறக்கம் போட்டோம் அனைவரும். அம்மாவிற்கு பெங்களூர் குளிரில் வெளியே போகவும் விருப்பம் இல்லை. காவ்யா ஸ்வாதியை அவள் ரூமிற்கு அழைத்துச் சென்றாள். திரும்ப வரும் பொழுது சாக்லேட்ஸ் உடன் வந்தாள் ஸ்வாதி. "என்ன காவ்யா என்னை எதுவுமே வாங்கித் தர விடமாட்டேன்கிற" என்று செல்லமாய் கோபித்துக் கொண்டேன். "அண்ணா மதினியை விட்டுட்டு போக எனக்கு மனசே வரல" என்று சோகமாய் சொன்னாள் ஸ்வாதி. "கவலைப்படாத ஸ்வாதி அடுத்த டைம் கார்த்திக் ஊருக்கு வரும் போது நானும் வந்திடுறேன்" என்று காவ்யா சொல்ல அம்மா முறைக்கிறாளா சிரிக்கிறாளா என்று எனக்கு ஒரே குழப்பமாய் இருந்தது.

9.20 க்கு ரயில். அனைவரும் ஸ்டேஷனுக்கு புறப்பட்டோம். "கார்த்திக் இன்னைக்கும் கோட் எடுத்துக்க மறந்திட்டியா? திரும்ப வரும் போது ரொம்ப குளிரா இருக்கும்டா. கோட் எடுத்துக்கோ" என்றாள் காவ்யா. 'அவ்வளவா குளிர் இல்ல காவ்யா. வா கிளம்பலாம்' என்றேன். "என்னது குளிர் இல்லையா!! எனக்கு ஒரே நடுக்கமா இருக்கு. அவா சொன்ன மாதிரி அந்த கோட் எடுத்துக்க" என்று அம்மா சொன்னதும் எனக்கு மனதில் ஒரு இனம் புரியாத சந்தோஷம் வந்தது.

9 மணி, பெங்களூர் ரயில் நிலையம் :

அம்மாவும் ஸ்வாதியும் ரயிலில் ஏறி அமர்ந்தார்கள். "அத்தை என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா இல்லையான்னு நீங்க சொல்லவே இல்லை" என்று கேட்டே விட்டாள் காவ்யா. அம்மா முதல் முறை காவ்யாவிடம் பேச ஆரம்பித்தாள்.

"ஒவ்வொரு பையனும் தன்னோட ரெண்டாவது அம்மாவை வாழ்க்கைத் துணை மூலமா பார்க்கிறதாவும், ஒவ்வொரு பொண்ணும் தன்னோட முதல் குழந்தையை தனக்கு வரப் போறவன் மூலம் அடையிறதாவும் ஒரு புத்தகத்துல படிச்சு இருக்கேன்மா. என் பையனை நீ ஒரு குழந்தை மாதிரி பார்த்துக்கிற. அவனை நான் கூட இருந்து கவனிச்சுக்கிற மாதிரி இருக்குமா. உனக்கு அவன் மேல இருக்கிற காதலும் என்னோட தாய்ப்பாசமும் ஒன்னு தான். உங்களை பிரிக்க எனக்கு மனசு இல்லம்மா" என்று சொல்லி காவ்யாவின் நெற்றியில் முத்தமிட்டாள் அம்மா.

"எங்க காதலை நீங்க ஏத்துக்கிட்டது ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு அத்தை" என்று சொல்லி அம்மாவின் காலில் விழுந்தாள் காவ்யா.

"அத்தை நான் போய் குடிக்க தண்ணீர் வாங்கிட்டு வந்திடுறேன்" என்று தண்ணீர் வாங்கச் சென்றாள் காவ்யா.

'ரொம்ப தேங்க்ஸ் மா காவ்யாவை நீ புரிஞ்சுகிட்டதுக்கு' என்றேன்.


பின்வரும் நிகழ்வுகளைப் பற்றி எதவும் தெரியாத கார்த்திக் சிரித்துக் கொண்டிருந்தான்.
எல்லாமே சுபமாக தான முடிஞ்சு இருக்கு இனிமேல என்னன்னு தான யோசிக்கிறீங்க!!! காவ்யாவும், கார்த்திக் அம்மாவும் மனதில் நினைத்தது என்னவென்றால்,

"டேய் உன்னைய லவ் பண்ண வைக்கக் கூட நான் இவ்வளவு கஷ்டப்படலைடா. உங்க அம்மாவை சம்மதிக்க வைக்க அவ்வளவு கஷ்டப்பட்டுட்டுடேன். கல்யாணத்துக்கு அப்புறம் பார்த்துக்கிறேன் அவங்களா நானான்னு" - காவ்யா.

"காவ்யா என் மருமகளே, என்ன தான் நீ பாசமா என்கிட்ட பேசினாலும் என்னைய கவிழ்க்க சதி நடக்கிற மாதிரியே இருக்கு. கல்யாணத்துக்கு அப்புறம் பார்த்துக்கிறேன் நீயா நானான்னு" - அம்மா.