Pages

Friday, November 29, 2013

கனவுகளைக் காதலிக்கிறேன் - 9

நிலா அவள் பாட்டி வீட்டிற்கு சென்று விட்டாள். எப்பவும் வரும் விடுமுறை தான் ஆனால் அவளை இந்த முறை மிகவும் மிஸ் பண்ணினேன். அவளிடம் பேச வேண்டும் போல இருந்தது.. அவள் பாட்டி வீட்டு நம்பர் தெரியாது. அவள் வீட்டிற்கு போன் செய்து அவள் அம்மாவிடம் நம்பர் வாங்கி விடலாமா என்று தோன்றியது. ஆனால், அவள் பாட்டி வீட்டில் போன் இருக்காது என்று நினைக்கிறேன். இருந்திருந்தால் கண்டிப்பாக கொடுத்து விட்டு தான் சென்று இருப்பாள். பகல் பொழுது முழுவதையும் கிரிக்கெட் ஆடியே கழித்தேன். மாலை டிவி பார்க்கலாம் என்றால் அம்மா சீரியலாக பார்த்து என்னையும் சீரியல் பைத்தியம் ஆக்கிவிடுவார் என கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடினேன். இப்படியே நாட்கள் சென்றது.

ஒரு வியாழக்கிழமை கிரிக்கெட் விளையாடி விட்டு வீட்டிற்கு வந்தேன். வந்ததும் வராததுமாய் அம்மா 'எங்கடா போய் இருந்த? நிலா கால் பண்ணிருந்தா' என்றார். "அடுத்து எப்பம்மா கால் பண்றேன்னு சொன்னா?" என்று கேட்க 'அதை பத்திலாம் ஏதும் சொல்லல டா அவ பாட்டி வீட்டுல இருக்கா போல வெளிய வந்தாளாம் அதான் கால் பண்ணாளாம்.. ரிசல்ட் எப்ப வருதுன்னு கேட்டாள்' என்றார். ஹ்ம் சரி மா என்று பதில் அளித்துவிட்டு என் அறைக்குச் சென்றேன். ச்ச மிஸ் செய்து விட்டோமே என்று மிக வருத்தமாக இருந்தது.

மறுநாள், நண்பர்கள் வந்து என்னை விளையாட அழைக்க “எனக்கு தலை வலி அதனால நான் வரலை” என்றேன். அதற்கு சந்தோஷ ‘டேய் போன வாரம் கால்ல அடிபட்டு ஓட முடியாத நிலைமைல இருந்த… அப்பவே விளையாட வந்த.. இப்ப என்னாச்சு? சாதாரண தலை வலிக்கு வரலன்னு சொல்ற’ என்றான். ‘நான் விளையாடப் போறேன்னு தான் சொன்னேன்டா அம்மா தான் தலை வலி அதனால இன்னைக்கு ஒரு நாள் வெயில்ல விளையாடப் போகாம வீட்ல இருன்னு சொல்லிட்டாங்க’ என்றேன். ‘நான் வேணா அம்மாகிட்ட பேசிப் பார்க்கிறேன் டா’ என்று ராஜா உள்ளே நுழைய முயற்சிக்க “அம்மா கோவிலுக்குப் போய் இருக்காங்க. அவங்க வந்ததும் நான் கேட்டு வர முயற்சி பண்றேன் டா” என்றேன். ‘சீக்கிரம் வந்து சேரு’ என்று சொலிவிட்டு எல்லாரும் கிளம்பிச் சென்றனர்.

நான் என் அறைக்குப் போய் கம்ப்யூட்டர் கேம்ஸ் விளயாட ஆரம்பித்தேன். அம்மா சமையல் வேலையை முடித்து விட்டு என் அறையை சுத்தம் செய்ய வந்தார். என்னைப் பார்த்ததும் ‘என்ன அதிசயமா இருக்கு! விளையாடப் போகாம இருக்க?’ என்றார்.  ஏதாச்சும் உளறினால் மாட்டிப்பேன் என்று “நான் விளையாடக் கூப்பிட்டேன் மா பசங்களை. ரொம்ப வெயில் அடிக்குதாம் இன்னைக்கு ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு லீவுன்னு சொல்லிட்டாங்க.. என்ன பசங்களோ இந்த வெயிலைக் கூட தாங்கிக்க முடியல.அடுத்து என்னைக் கூப்பிடும் போது நான் வரலன்னு சொல்லிடப் போறேன்.. ஆனால் என்னால தான் விளையாடாமல் இருக்க முடியாது நான் அவங்க கூப்பிட்ட உடனே போயிடுறேன்” என்றேன். ‘ஒரு நாள் தான. நான் ஏற்கனவே உன்னை தினமும் போகாதன்னு திட்டிட்டு இருக்கேன். என்னால 5 நிமிஷம் கூட வெயில்ல நடந்து போக முடில. ஆனால் நீ ஏதோ நிலாக் குளியல் எடுக்கிற மாதிரி அந்த வெயில்ல ஆடிட்டு வர்ற! பாரு வெயில்ல விளையாடி எப்படி கறுத்துப் போய்ட்டன்னு. இன்னைக்கு ரெஸ்ட் எடுக்கலாம்னு சொன்ன பசங்கள கூட்டிட்டு வா அவங்களை பாராட்டனும்’ என்றார். “போங்கம்மா நானே இன்னைக்கு விளையாட முடியலயேன்னு பீலிங்க்ஸ்ல இருக்கேன்’ என்று முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டேன்.

நான் ஏன் விளையாடப் போகாமல் இருக்கிறேன் என்று இனி நான் சொல்லத் தேவை இல்லை. உங்களுக்கே புரிந்திருக்கும் இப்பொழுது. கேம்ஸ் ஆடிக் கொண்டிருந்தேன் மனமே இல்லாமல். சிறிது நேரத்தில் போன் மணி அடிக்க பதறி அடித்துக் கொண்டு ஓடினேன். அம்மாவும் கிச்சனில் இருந்து வர “இவ்வளோ நேரமா ரிங் அடிக்குது என்ன மா பண்ற எடுக்காம” என்றேன். ‘என்ன டா சொல்ற.. இப்ப தான் போன் வந்த மாதிரி இருக்கு. ஒரு ரிங் கூட முடியலையே’ என்றார். “இல்லம்மா நிறைய ரிங் வந்துச்சு உனக்கு கேட்கல போல கிச்சன்ல பிசியா இருந்திருப்பீங்க” என்றேன். ‘இல்லையே போன் சத்தம் எப்பவும் எனக்கு கேட்குமே’ என்றார். “அம்மா எங்கிட்ட பேசினது போதும் முதல்ல போன்ல யாருன்னு பாருங்க” என்றேன். ‘பாரு உன்னோட பேசிட்டே நான் அதை மறந்துட்டேன்’ என்று சொல்லிவிட்டு போனை எடுத்து பேச ஆரம்பித்தார். அம்மா பேசுவதில் இருந்து அவர் அத்தையுடன் பேசுகிறார் என்று தெரிந்தது. நான் போய் டிவி பார்க்க ஆரம்பித்தேன். பேசி முடித்துவிட்டு அம்மா என்னிடம் வந்து ‘டேய் டிவி தான பார்த்துட்டு இருக்க அடுத்து போன் ஏதாச்சும் வந்தா அட்டென்ட் பண்ணு. கிச்சன்ல இருக்கிறதுனால கேட்காம போயிடப் போகுது எனக்கு’ என்றார். அதுக்கு தான இங்க உட்கார்ந்திட்டு இருக்கேன் என்று மனதில் நினைத்தவன் “சரி மா” என்றேன்.

அரை மணி நேரம் கழித்து மீண்டும் போன் ஒலித்தது. மீண்டும் வேகமாக ஓடிச் சென்று போனை எடுத்தேன் நல்ல வேலை அம்மா பார்க்கவில்லை. “ஹலோ” என்றேன். ‘சார் இது பாலாஜி எலெக்ட்ரிகல்ஸா’ என்று குரல் எதிர்முனையில் இருந்து.”ராங் நம்பர்” கடுப்பில் போனை வைத்தேன். டிவி போர் அடிக்கவே ‘five point someone’ கதை புக்கை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். பாதி புக் படித்து முடிக்கும் போது மீண்டும் போன் வந்தது. இந்த முறையும் வேறு யாராச்சும் இருக்கும் என்று எந்த அவசரமும் இல்லாமல் பொறுமையாகப் போனேன். ‘போனை எடுக்காம என்னடா பண்ற?’ என்று அம்மாவின் குரல் கேட்டது. அட்டென்ட் பண்ணிட்டேன் மா என்று பதிலளித்துவிட்டு “ஹலோ” என்றேன்.

‘போனை எடுக்க இவ்வளோ நேரமா டா?’ என்று ஒரு பெண் குரல்.

“ஹே நிலா.. எப்படி இருக்க?”

‘நான் கேட்டதுக்கு பதில் சொல்லு. ஏன் இவ்வளோ நேரம்? சார் அவ்வளோ பிசியா?’

“இல்ல.. ரூம்ல புக் படிச்சிட்டு இருந்தேன் அதான்”

‘என்னை விட புக் தான் உனக்கு முக்கியமா?’

“உன்னோட கால்னு எனக்கு தெரியாதுல்ல”

‘நான் இன்னைக்கு கால் பண்ணுவேன்னு உனக்கு தெரியாது?’

“தெரியும் நீ கண்டிப்பா பண்ணுவன்னு”

‘எப்படி?’

“நான் எப்படி இன்னைக்கு விளையாடப் போக மாட்டேன்னு தெரியும் உனக்கு? வீட்டுல தான் கண்டிப்பா இருப்பேன்னு கால் பண்ணல்ல அப்படி தான்” என்றேன்.

சிரித்தாள்.

‘ஆமா ஏன் இன்னைக்கு நீ விளையாடப் போல?’

“ஒரு லூசு கால் பண்ணும்னு தான். இப்ப தான் என் ஞாபகம் வந்துச்சா?”

‘இல்ல டா. பாட்டி வீட்ல போன் இல்ல. பக்கத்து ஊருக்கு நேத்து வந்தோம். அதான் உனக்கு போன் பண்ணேன். ஆனால் அம்மா எடுத்தாங்க என்ன சொல்லன்னு தெரியலை அதான் 10த் ரிசல்ட் பத்தி கேட்க போன் பண்ணேன்னு சொன்னேன். இன்னைக்கு உன் மேல நம்பிக்கை நீ என் போனுக்காக காத்திட்டு இருப்பன்னு. பாட்டிட்ட ரிசல்ட் எப்ப வரும்னு ஸ்கூலுக்கு போன் பண்ணி கேட்கனும்னு சொல்லிட்டு இன்னைக்கு வந்திருக்கேன் டா’

“என்னை ரொம்ப மிஸ் பண்ணியா?”

‘என்னோட க்ளோஸ் ப்ரெண்ட் நீ உன்னை மிஸ் பண்ணாம இருப்பேனா? எப்ப ரிசல்ட் வரும்னு இருக்கு டா. உன்னை பார்க்கணும்’

“ரிசல்ட் மே 18 வர்றதா சொல்றாங்க. அதனால நீ 15 கிட்ட வந்திடு”

‘சரி டா பாட்டி வந்துட்டாங்க. நான் வைக்கிறேன் ஊருக்கு வந்துட்டு பேசுறேன்’ என்று சொல்லிவிட்டு கட் செய்தாள்.

நிலாவின் குரல் கேட்டது எனக்கு ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியை தந்தது.

மே 18 – பதம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தது.

நானும் நிலாவும் ரிசல்ட் பார்க்கச் சென்றோம். நிலா எதிர்பார்த்தது போல நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தாள். 1100க்கு 1047. ஆனால் அன்று எதிர்பாராத ஒன்றும் நடந்தது நான் 1002 எடுத்திருந்தேன். என்னை விட மிகவும் சந்தோசப்ட்டவள் நிலா தான்.

பின் ஸ்கூலுக்குச் சென்றோம். நிலா மெட்ரிக் தேர்வில் எங்கள் மாவட்டத்தில் முதலாவதாக வந்திருந்தாள். அளவில்லா மகிழ்ச்சி எனக்கு. அவளுக்கு வாழ்த்துக்‌களாக குவிந்தது. அனைத்து ஆசிரியர்கள் நண்பர்களின் பாராட்டு மழையில் நனைத்து கொண்டிருந்தாள். எல்லாவற்றையும் நான் சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

என்னிடம் வந்து தலைமை ஆசிரியர் வாழ்த்துக்களைக் கூறினார். எதுக்கு சார் என்று நான் கேட்க நீ தான்பா ஸ்கூல் செகன்ட் என்றார். “சார் என்னால நம்ப முடியல” என்றேன். ‘எங்களாலையும் தான்பா’ என்றார் சிரித்தவாறே. ‘12 ல இதை விட நல்லா ஸ்கோர் பண்ணனும். நிலா உனக்கு ஒரு போட்டி வந்தாச்சு. ரொம்ப நல்லா படிக்கணும் இனிமேல’ என்று எங்கள் இருவரையும் வாழ்த்தி விட்டுச் சென்றார்.

நிலா ‘டேய் சூப்பர் டா. இன்னும் கொஞ்சம் நல்லா படிச்சிருந்தா நீ ஃபர்ஸ்ட் வந்திருக்கலாம். 12 ல நீ ஃபர்ஸ்ட்டா வரனும்’ என்றாள்.

“முதல் இடம் எப்பவும் உனக்கு தான் சொந்தம். அதை யாரும் அசைக்க முடியாது. எனக்கு நல்ல ஸ்கோர் எடுத்தாப் போதும்” என்றேன்.

‘நீ நல்லா படிச்சு முதலா வருவன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு’ என்றாள் நிலா.

பதினொன்றாம் வகுப்பு அட்மிசன் இரண்டு நாட்களில் நடந்தது. நான் நிலா வித்யா அஷோக் கார்த்திக் அனைவரும் முதல் க்ரூப் எடுத்தோம்.

நிலாவிடம் தமிழ் சாரிடம் ஃபர்ஸ்ட் க்ரூப் எடுத்ததை சொல்லிவிட்டு வா என்றேன். அவளும் சரி என்று சொல்லிவிட்டு வந்தாள். நானும் சென்று “சார் நானும் முதல் க்ரூப் எடுத்திருக்கேன்” என்று சொல்ல ‘வாழ்த்துக்கள்’ என்றார். “சார் முதல் க்ரூப்லயும் ரெண்டு செக்சன் இருக்குமா?” என்று நான் கேட்க அவர் கோபத்தில் ‘தெரியாது. எனக்கு ஸ்பெசல் க்ளாஸ்க்கு நேரம் ஆச்சு’ சொல்லிவிட்டு நகர்ந்தார்.

‘ஏன்டா அவர்ட்ட போய் வம்பிழுத்திட்டு வர்ற?’ என்றாள் நிலா.

“அப்புறம் என்ன நம்மள போன வருஷம் பிரிச்சாருல்ல. இனி என்ன பண்றாருன்னு பார்க்கிறேன்” என்றேன்.

‘அனால் நீயே ஐடியா கொடுத்திட்டு வர்ற ரெண்டு செக்சனுக்கு’

“அய்யோ இருக்கிறது 25 பேரு. ஒன்னுக்கே வழியைக் காணோம் இதுல எங்க ரெண்டு பிரிக்கப் போறாங்க’ சிரித்தேன்.

‘எனக்கு பயமா இருக்கு டா. அவர் நமக்கு க்ளாஸ் எடுக்க வந்தா ஏதாச்சும் பிரச்சனை பண்ணுவாரு உங்கிட்ட’

“பயப்படாத நமக்கு தமிழுக்கு லக்ஷ்மி மேடம் தான் வர்றாங்க” என்றேன்.

‘ஹ்ம்ம்’ என்றாள். அவள் கண்களில் இருந்த பயம் போகவில்லை.

11ம் வகுப்பு முதல் நாள்,
தமிழ் சார் உள்ளே நுழைந்தார். என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டே ‘XIth முதல் க்ரூப்புக்கு நான் தான் க்ளாஸ் டீச்சர். என்னால உங்களை விட்டுப் பிரிய முடியல. அதான் நானே கேட்டு வாங்கி இந்த செக்சனுக்கு க்ளாஸ் டீச்சர் ஆயிருக்கேன்’ என்றார்.

நிலா கண்களில் ஒரு பயம் தெரிந்தது என்னை ஏதும் செய்து விடுவார் என்று.


உறங்கச் செல்கிறேன்….

Friday, November 15, 2013

கனவுகளைக் காதலிக்கிறேன் - 8

ஒரு வழியாக Block C 307 ஐ கண்டு பிடித்தேன். நிலா வெளியில் நின்று கொண்டிருந்தாள்.

எனக்காகத் தான் காத்துக் கொண்டிருக்கின்றாள் என்று தெரிந்தும், “என்ன நிலா ஹால் டிக்கெட் மறந்துட்டியா? எக்ஸாம் ஹாலுக்குள்ள போகாம வெளிய நின்னுட்டு இருக்க?” என்றேன்.

‘அதை விடுங்க சார். நீங்க இந்த Block ல என்ன பண்றீங்க? உங்க ஹால் டிக்கெட் பறந்து வந்திடுச்சா?’

சிரித்தேன்.

“எப்படி நான் வருவன்னு நினைச்ச?”

‘உன் மேல இருந்த நம்பிக்கைல. என்னை நீ இன்னும் புரிஞ்சுக்காம இருக்கமாட்ட அப்படிங்கிற நம்பிக்கைல’

“சாரி உன்னோட சண்டை போட்டதுக்கு”

‘விடு அதை. சீக்கிரம் சொல்லு டா. எக்ஸாம்க்கு நேரம் ஆயிடுச்சு. நீ உன் Block வேற போகணும்’ என்றாள் நிலா.

“என்னைப் பார்த்தால் போதாதா? நான் சொன்ன தான் நல்லா எழுதுவியா?”

‘அய்யோ. சொல்லுடா சீக்கிரம்’

“All the best. கண்டிப்பா நீ தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட் எடுக்கப் போற. உன்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு”

‘நீ எடுத்தா நல்லா இருக்கும் டா’

“கனவுல கூட அப்படி நடக்காது”

‘நீ நினைச்சா கண்டிப்பா சாதிக்கலாம்’

“ஏன் காமெடி பண்ற இப்போ. நான் ஃபர்ஸ்ட் கிளாஸ் எடுக்கிறதே பெரிய விசயம்னு உனக்கும் தெரியும்ல”

‘டேய் ஃபர்ஸ்ட் க்ரூப் எடுக்கணும்னா நல்ல ஸ்கோர் வேணும். ப்ளீஸ் நல்லா எழுதுடா’

எதுவும் பதில் பேசாமல் சிரித்தேன்.

‘எருமை பன்னி பிசாசு. சரி நேரம் ஆச்சு நான் உள்ள போறேன். நீயும் கிளம்பு’ என்றாள்.

அப்பொழுது ஏதேச்சையாக வித்யாவைப் பார்த்தேன். அவளும் என்னைப் பார்க்க அவளுக்கும் ‘Best of luck’ என்றேன்.

இதைப் பார்த்த நிலா ‘உங்களை வரச் சொன்னது எனக்கு வாழ்த்து சொல்ல மட்டும் தான். ஊர்ல இருக்கிற எல்லாருக்கும் இல்ல’ கோபித்துக் கொண்டாள்.

“நம்ம வித்யா தான?”

‘அப்படியா சரி அடுத்த எக்ஸாம்ல இருந்து நான் உங்க block வர்றேன்’

“என்னைய அலைய விட வேணாம்னு பார்க்கிறியா? சூப்பர்”

‘அப்படி இல்ல சார். நீங்க இங்க வந்து விதியாக்கு வாழ்த்து சொல்லுங்க. நான் போய் கௌதம்க்கு வாழ்த்து சொல்றேன். ஓகேவா?’

“சாரி. எக்ஸாம் முடிச்சிட்டு பார்க்கலாம். நல்லா பண்ணு” சொல்லிவிட்டு என் எக்ஸாம் ஹாலுக்கு விரைந்தேன்.

வந்து சேரும் போது மணி 10.05.

“excuse me sir”

‘you are late. not allowed inside’ என்று எக்ஸாம் சூப்பர்வைஸர் சொல்ல “சாரி சார். நான் இந்த ஸ்கூல் இல்ல. எக்ஸாம் ஹால் கண்டுபிடிச்சு வர நேரம் ஆயிடுச்சு” என்றேன்.

ஆனால் அவர் என்னை விட புத்திசாலி என்பதால் ‘உன் ஸ்கூல் பசங்க எல்லாரும் சரியான நேரத்துக்கு வந்துட்டாங்களே’ என்றார். உள்ளே இருந்து கார்த்திக்கும் அஷோக்கும் இப்ப என்ன சொல்லுவ என்பது போல என்னை பார்த்துக் கொண்டிருந்தனர்.

‘சார் முதல் பரீட்சை அதனால கோவிலுக்கு போயிட்டு வர்றேன். அடுத்த எக்ஸாம்ல இருந்து ஸ்கூல் பஸ்ல வருவேன் சார்’

‘சென்டிமென்ட்ல அட்டாக் பண்ணிட்டான் டா’ கார்த்திக் அஷோக்கிடம் சொன்னது எனக்கே கேட்டது. நல்ல வேளை அவருக்கு கேட்கவில்லை.

“கற்பக விநாயகர் கோவில் விபூதி எடுத்துக்கிறீங்களா சார்?”

‘இல்லை தம்பி வேணாம். நீ போய் எக்ஸாம் எழுது. நல்லா பண்ணு தம்பி. Answer sheet எடுத்துக்கோ. இந்தா question paper’ அவர் டோனே மாறியது.

“சாரி விநாயகா. சின்னதா பொய் சொல்ல வேண்டியது ஆயிடுச்சு” பாவமன்னிப்பு கோரிவிட்டு எழுத ஆரம்பித்தேன்.

எக்ஸாம் முடிந்ததும் எங்கள் கேங் மீட்டிங் ரொம்ப நாளுக்குப் பின் நடந்தது. என்னையும் நிலாவையும் விட நாங்கள் சேர்ந்தது மற்றவர்களுக்குத்  தான் மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. கார்த்திக்கும் அஷோக்கும் காலை எக்ஸாம் ஹாலில் நடந்த கூத்தை சொல்லி நாக்கள் அடித்துக் கொண்டிருந்தனர்.

‘அவர் மட்டும் விபூதி கேட்டிருந்தா இன்னும் கொஞ்சம் காமெடி ஆயிருக்கும்’ என்று என்னை கலாய்த்துக் கொண்டிருந்தான் அஷோக்.

அனைவரும் விடை பெற்றோம் வீட்டிற்கு. நிலா என்னிடம் வந்தாள் ‘அடுத்த எக்ஸாம்ல இருந்து சீக்கிரம் வா என்னைப் பார்க்க. என்னை மட்டும்’ அழுத்திச் சொல்லிவிட்டு அவளும் கிளம்பினாள்.

எக்ஸாம் என்றால் முன்பெல்லாம் பயமாக இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் நிலாவிற்கு All the Best சொல்வதற்காகவே எப்பொழுது எக்ஸாம் வரும் என்று காத்துக் கிடக்க ஆரம்பித்தேன். எல்லாம் எக்ஸாமிற்கும் நிலாவிடம் சிறிது நேரம் பேசிவிட்டு தான் சென்றேன். எந்த டென்சனும் இல்லாமல் எக்ஸாம் எழுதுவது போல உணர்ந்தேன். ஒரு வழியாக எக்ஸாம் எல்லாம் முடிந்தது.

விடுமுறை தொடங்கியது. எக்ஸாம் முடிந்த சந்தோசத்தில் எல்லாரும் இருந்தோம். இருந்தாலும் அடுத்து XIth தொடங்கும் வரை பார்த்துக் கொள்ள முடியாது என்ற சோகம் எல்லார் முகத்திலும் இருந்தது. ‘happy holidays’ சொல்லி எல்லாரும் விடை பெற்றோம்.

வழக்கம் போல நிலாவும் நானும் சைக்கிளை உருட்டிக் கொண்டே சென்றோம்.

“நிலா அடுத்து உன்னை எப்ப பார்க்க முடியும். ஸ்கூல் தொடங்கிற அன்னைக்குத் தானா?”

‘ஆமா டா. நான் ஊர்ல இருக்க மாட்டேன். கிராமத்துல இருக்கிற எங்க பாட்டி வீட்டுக்குப் போறேன் டா’

என் முகம் வாடிப் போனதை கண்டிப்பாக அவள் உணர்ந்திருப்பாள். அவளே பேச்சைத் தொடர்ந்தாள்.

‘நீ எங்கேயும் போகலையா டா?’

“இல்ல நிலா. இங்க தான் இருப்பேன். கிரிக்கெட் டிவின்னு பொழுதைப் போக்க வேண்டி தான்”

‘ஹ்ம்ம்’

“உன்னைப் பார்க்க அவ்வளோ நாள் காத்துட்டு இருக்கனுமா?’

‘என்னடா ஆச்சு உனக்கு?’

“தெரியல”

‘எல்லா லீவுக்கும் நான் ஊருக்குப் போறது தான டா. அப்ப எல்லாம் நார்மலா தான இருப்பா. இப்ப என்னாச்சு?’

“ஒன்னும் ஆகலையே நான் நல்லா தான் இருக்கேன்” சிரித்தேன் அவள் சிரிப்பதற்காக.

‘ரொம்ப கஷ்டப்பட்டு சிரிக்காத. சரி உனக்காக எக்ஸாம் ரிசல்ட் வர்ற அன்னைக்கு நான் திரும்பி வந்திடுறேன். நாம ரெண்டு பெரும் சேர்ந்து போய் ரிசல்ட் பார்க்கலாம் ஓகேவா?  சந்தோசமா?’

“ஏதோ கொஞ்சம்”

சிரிப்பு மட்டும் பதிலாய் அவளிடம் இருந்து.

‘சரி டா நான் கிளம்புறேன் அம்மா தேடுவாங்க’ புறப்பட்டுச் சென்றாள்.

“Miss you Nila” என்றேன்.

சிறிது தூரம் சென்றவள் என்னைத் திரும்பி பார்த்தாள் ‘ஏதோ சொன்ன மாதிரி இருந்தது என்ன டா?’ என்றாள்.

“Happy journey. Enjoy the Holidays. Have fun ன்னு சொன்னேன்” என்றேன்.

‘ஓ ஓகே. நன்றி டா. வேற ஏதும் சொல்லலையே நீ?’

“இல்ல நிலா”

‘நிஜமா வேற ஏதும் சொல்லல?’

“இல்ல நிலா”

‘ஹ்ம்ம். நீயும் என்ஜாய் பண்ணு. வெயில்ல விளையாடி ரொம்ப கறுப்பாயிடப் போற. ஏற்கனவே நீ ரொம்ப கலர் வேற :-P டாடா’ விடை பெற்றாள் சிரித்துக் கொண்டே.

சிறிது தூரம் சென்று மீண்டும் திரும்பி பார்த்தவள்,

‘Miss you too da’ என்றாள். 

உறங்கச் செல்கிறேன்….

Saturday, November 09, 2013

கனவுகளைக் காதலிக்கிறேன் - 7


நண்பனுக்கு,

நீ என்னை ரொம்ப நல்லா புரிந்து கொண்டவன் என்ற நம்பிக்கையோட இருந்தேன். ஆனால் அன்னைக்கு நீ என்னோட சண்டை போட்டதுல என்னோட நம்பிக்கை தவிடுபொடி ஆயிடுச்சு. அதாவது பரவாயில்லை அதுக்கப்புறமும் நான் உன்கிட்ட என்ன நடந்துச்சு என்று எடுத்துச் சொல்ல வந்தும் நீ கேட்கவே முடியாதுன்னு சொல்லிட்ட. அதனால தான் இப்படி லெட்டர் எழுத வேண்டிய நிலை வந்திடுச்சு.

அன்னைக்கு நீ லேப்ல இருந்த. நீ அப்ப தான் உள்ளே போனதா வித்யா சொன்னாள் அதனால நான் என் க்ளாஸிற்கு திரும்பப் போனேன் நீ எக்ஸாம் முடிச்சிட்டு வருவ என்று. உனக்காக காத்துக்கிட்டு இருக்கும் போது தான் கௌதம் வந்தான் என்னையும் சாப்பிடக் கூப்பிட்டான். நான் வரலை என்று எவ்வளவோ முறை சொல்லிப் பார்த்தேன் அவன் கேட்கவே இல்லை. ரொம்ப வற்புறுத்திட்டு இருந்தான். அதனால தான் நான் அவன் கூடப் போனேன். ஆனால், அப்ப நான் சாப்பிடல. அவன் கேட்டான் ஏன் சாப்பிடல என்று. நான் எப்பவும் உன்னோட தான் சாப்பிடப் போவேன்னு சொன்னேன். அவன் சாப்பிட்டு முடிச்சப்புறம் நாங்க ரெண்டு பேரும் திரும்ப க்ளாஸ்க்கு வந்திட்டு இருந்தோம் அப்ப தான் நீ எங்க ரெண்டு பேரையும் பார்த்த. தப்பா புரிஞ்சுக்கிட்ட. அப்பவே என்னை நீ பேச விட்டிருந்தா இவ்வளோ பெரிய சண்டை ஆயிருக்காது. பத்தாம் வகுப்பு முழுதும் நாம ரெண்டு பேரும் பேச முடியாதபடி ஆக்கிட்டா. வேற செக்ஷன் போட்டப்ப நான் எவ்வளோ ஃபீல் பண்னேன்னு உனக்கு தெரியும். ஒரே செக்ஷன்ல இருந்து நீ சண்டை போட்டிருந்தா கூட பரவாயில்லை. நான் எவ்வளோ கஷ்டபபடுறேன்னு தெரிஞ்சும் எப்படி உன்னால சண்டை போட்டு விட்டுட்டுப் போக முடிஞ்சதுன்னு தெரியல. உனக்கு தெரியுமா? நானும் அன்னைக்கு சாப்பிடல நீ சாப்பிடலைல:-(

இப்பவாது என்னைப் பற்றி உனக்கு நல்லா புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். உனக்காக காத்துக்கிட்டு இருப்பேன் எக்ஸாம் ஹாலுக்கு வெளியில். நான் பரீட்சை நல்லா எழுதுறது உன் கையில தான் இருக்கு. கிரிக்கெட் ஆடிட்டு டிவி பார்த்திட்டு இருக்காத லீவ்ல.. பரீட்சைக்கு நல்லா படி.

என்னடா லவ் லெட்டெர்ன்னு நினைச்சியா :-P படம் பார்த்து நீ ரொம்ப கெட்டுப் போய் இருக்க :-P

நட்புடன்,
நிலா


கடைசி  வரியை படித்ததும் எனக்கு சிரிப்பு தான் வந்தது. ஆனால் நிலாவை நான் புரிந்து கொள்ளாமல் இருந்தததை நினைத்து மிக வருந்தினேன். எவ்வளோ பெரிய முட்டாள்தனம் பண்ணிருக்கிறேன் என்று என் மேலே எனக்கு கோபம் வந்தது. முதல் பரீட்சைக்காக காக்க ஆரம்பித்தேன்.. அன்று தான் நிலாவை அடுத்து பார்க்க முடியும் என்பதால்.

இங்கிலீஷ் I பேப்பர் அன்று. ஸ்கூலுக்குச் சென்றேன். எக்ஸாம் சென்டர் வேறு ஒரு பள்ளியில் என்பதால் எங்கள் ஸ்கூலில் இருந்து பஸ்ஸில் நாங்கள் அனைவரும் செல்வதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அஷோக், கார்த்திக் இருவரையும் பார்த்தேன் பஸ் அருகில்.

“அசோக், வித்யா எங்க டா பஸ்ல இருக்காளா?”

‘அசோக், இவன் வித்யாவை தேடுறான்னு நினைக்கிறியா?’ என்றான் கார்த்திக்.

“டேய் வித்யாவைத் தான் டா” என்றேன்.

‘இங்கிலீஷ் I பேப்பர் மேல சத்தியம் பண்ணு நாங்க வித்யா எங்க இருக்கான்னு சொல்றோம்’ என்றான் அஷோக்.

அடப்பாவிங்களா. முதல் பரீட்சை
யையே ஊத்திக்க வச்சிடுவீங்க போலியே என்று “நிலா எங்க?” என்றேன்.

‘இதை முதலிலேயே கேட்க வேண்டி தான’ – கார்த்திக்

“அது வந்து….” என்ன சொல்வதென்று தெரியாமல் இழுத்துக் கொண்டிருந்தேன்.

‘விடு கார்த்திக் பாவம் அவன். எப்படி தேடுறான் பாரு. மச்சி நம்ம தமிழ் சார் இருக்கிறார்ல?’

“அவருக்கு என்னாச்சு டா அஷோக்?”

‘அவருக்கு எப்பவும் ஒன்னும் ஆகாது டா. அவர் பொண்ணுங்க எல்லாரையும் ஒரு பஸ்ல அனுப்பி விட்டுட்டாரு டா’

“அவருக்கு எதுக்கு டா இந்த வேலை?”

‘யாருக்கு தெரியும்!! ஒரு வேளை பசங்க பிக்னிக் போறோம்ன்னு நினைச்சிடுவாங்கன்னு அப்படி பண்ணிருக்கலாம் டா’ என்றான் கார்த்திக்.

“சரி வாங்க டா நாமளும் கிளம்புவோம்” என்றேன்.

‘தம்பி எங்க போறீங்க? உனக்கு பஸ் ஓட்ட தெரிஞ்சா கிளம்பலாம்’ – அஷோக்

“ஏன்டா????”

‘இந்த பஸ் எடுக்க வேண்டிய ட்ரைவர் நேத்து ஃபுல் அடிச்சிட்டு மட்டை ஆயிட்டாராம். இப்ப தான் தெரிய வந்தது. அதான் வேற ட்ரைவரை வர சொல்லிருக்காங்க. அவர் இன்னும் 15 நிமிஷத்துல வருவாரு’ – அஷோக்.

“டேய் நாம போய் சேருரதுக்கும் எக்ஸாம் ஹாலுக்கு போறதுக்கும் சரியா இருக்கும் போல. நான் நிலாவை மீட் பண்ணனும் டா” என்றேன்.

‘எக்ஸாம் முடிச்சிட்டு மீட் பண்ணலாம்ல’  என்றான் கார்த்திக்.

“இல்ல டா அதுக்கு முன்னால பார்த்தே ஆகணும். அவங்க ஹால் எது? தெரியுமா உங்களுக்கு?”

‘அவங்க Block C Third Floor கிளாஸ் ரூம் 307 நாம Block A Third Floor கிளாஸ் ரூம் 307. ரெண்டும் வேற வேற Block டா. அவளை
ப் பார்த்திட்டு திரும்ப நம்ம ஹாலுக்கு வர்றது கஷ்டம் டா. அதனால எக்ஸாம் முடிச்சிட்டு பாரு நிலாவை. எக்ஸாம் ஹாலுக்கு லேட்டா வந்த எக்ஸாம் எழுத விட மாட்டாங்க” என்றான் கார்த்திக்.

“நான் பார்த்துக்கிறேன் டா. வந்திடுவேன் சரியான நேரத்துக்கு” என்றேன்.

எங்கள் பேருந்து தன் பயணத்தை தொடங்கியது. எக்ஸாம் சென்டரை சென்று அடையும் போது மணி 9.55. எக்ஸாம் 10 மணிக்கு. என்ன செய்வது என்று தெரியவில்லை. நிலா எனக்காக காத்துக் கொண்டிருப்பாள்….


உறங்கச் செல்கிறேன்….