Pages

Thursday, October 21, 2010

என் வாழ்க்கை

என் வாழ்க்கையை
இரண்டாகப் பிரிக்கலாம்..
நான் நானாக இருந்த
காலம் ஒன்று,
நான் நீயாக மாறிய
காலம் மற்றொன்று.

முதல் தரிசனம்

அனைவரும் கோவிலில்
இருக்கும் கடவுளை சுற்ற
நான் மட்டும் வாசலை
சுற்றுகிறேன்..
என் தேவதையின்
முதல் தரிசனம்
கிடைத்த இடம்
கோவில் வாசல் என்பதால்....

எ(உ)ன் காதல்

உன் மீதான
என் காதல்
உன் நிழலை
பின் தொடர்ந்தது.
என் மீதான
உன் காதல்
உன் நினைவுகளை
பின் தொடர வைக்கிறது....

Sunday, October 10, 2010

உன் பாதச் சுவடுகள்

உன்னுடைய பாதத்
தடங்கள் மட்டும்
வருடங்கள் ஆகியும்
அழியாமல் இருக்க
கடலிடம் கேட்டேன்.
கடல் சொன்னது,
'உன்னவள் எனக்காக
விட்டுச் சென்றது
இந்த சுவடுகள்
மட்டுமே' என்று

புவி ஈர்ப்பு சக்தி

உன் நினைவுகளுக்கு
புவி ஈர்ப்பு சக்தி
மிக அதிகம்.
அலை நனைக்கும் முன்
நான் நனைக்கின்றேன்
கடற்கரையை....

என் சவ ஊர்வலம்

என் சவ ஊர்வலத்தில்
பூக்களை தூவாதீர்கள்.
பூக்கள் மலர்வது
என்னவள் சூடிக்
கொள்வதற்கு தான்,
காலில் மிதிபடுவதற்கல்ல..

ஆதவன்

வானிலை ஆய்வாளர்கள் சூரியன்
உதிக்கும், மறையும் நேரத்தை
தவறாக கணிக்கின்றனர்.
ஆதவன் உதிப்பதோ
நீ கோலம் போடும்
அழகைப் பார்க்கும் ஆர்வத்தில்.
மறைவதோ நான் உன்
கை கோர்த்துக் கொண்டு
கடற்கரையில் நடப்பதை
பார்க்கும் ஆத்திரத்தில்...

Tuesday, October 05, 2010

பேரழகி

நிலா, நீர், மேகம்,
வானம், காற்று, மழை,
வானவில், மழலைச் சிரிப்பு
என்று அழகாய் இருப்பவைக்கு
எல்லாம் லட்சக் கணக்கில்
கவிதைகள் எழுதப்பட்டுவிட்டன.
எழுதப்படுகின்றன...

ஆனால்,
எல்லா அழகிற்கும்
சொந்தக்காரியான என்னவளுக்கு
என்னால் எழுத முடிந்தது
ஒரே ஒரு
கவிதை மட்டுமே!!!!

காதல்.

Sunday, October 03, 2010

என் இதயத்தின் எடை

என் இதயத்தின் எடை
ஐம்பது கிலோ..
நீ இருப்பதால்....

உன் அன்பு

விலகி இருக்க இருக்க
அன்பு கூடுமாம்..
அதற்காக உன்னை விட்டு
மடியும் வரை பிரிந்து
இருக்கச் சொல்வது
என்னடி நியாயம்?

ஆயுள் முடியும் வரையும்
உன்னை விட்டு
விலகி இருக்கவும் சம்மதம்!
இறந்த பின்னாவது
நீ எனக்காக தேக்கி
வைத்து இருந்த அன்பு
கிடைக்கும் என்ற
உத்திரவாதம் இருக்குமெனில்...

சாதிப்பால்

சிசுக் கொலைகள் இன்றும்
தொடரத் தான் செய்கிறது.
என் இரண்டு வயது

காதல் மழலையை
சாதிப்பால் ஊற்றி
கொன்று விட்டார்களே..

நரக வாசல்

ஒரு வாசல் மூடி
ஒரு வாசல் திறப்பான்
இறைவன்..
ஏன் எனக்கு மட்டும்
காதல் எனும் சொர்க்க
வாசலை மூடி
பிரிவு எனும் நரக
வாசலை திறந்து வைத்திருக்கிறான்???