Pages

Friday, November 15, 2013

கனவுகளைக் காதலிக்கிறேன் - 8

ஒரு வழியாக Block C 307 ஐ கண்டு பிடித்தேன். நிலா வெளியில் நின்று கொண்டிருந்தாள்.

எனக்காகத் தான் காத்துக் கொண்டிருக்கின்றாள் என்று தெரிந்தும், “என்ன நிலா ஹால் டிக்கெட் மறந்துட்டியா? எக்ஸாம் ஹாலுக்குள்ள போகாம வெளிய நின்னுட்டு இருக்க?” என்றேன்.

‘அதை விடுங்க சார். நீங்க இந்த Block ல என்ன பண்றீங்க? உங்க ஹால் டிக்கெட் பறந்து வந்திடுச்சா?’

சிரித்தேன்.

“எப்படி நான் வருவன்னு நினைச்ச?”

‘உன் மேல இருந்த நம்பிக்கைல. என்னை நீ இன்னும் புரிஞ்சுக்காம இருக்கமாட்ட அப்படிங்கிற நம்பிக்கைல’

“சாரி உன்னோட சண்டை போட்டதுக்கு”

‘விடு அதை. சீக்கிரம் சொல்லு டா. எக்ஸாம்க்கு நேரம் ஆயிடுச்சு. நீ உன் Block வேற போகணும்’ என்றாள் நிலா.

“என்னைப் பார்த்தால் போதாதா? நான் சொன்ன தான் நல்லா எழுதுவியா?”

‘அய்யோ. சொல்லுடா சீக்கிரம்’

“All the best. கண்டிப்பா நீ தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட் எடுக்கப் போற. உன்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு”

‘நீ எடுத்தா நல்லா இருக்கும் டா’

“கனவுல கூட அப்படி நடக்காது”

‘நீ நினைச்சா கண்டிப்பா சாதிக்கலாம்’

“ஏன் காமெடி பண்ற இப்போ. நான் ஃபர்ஸ்ட் கிளாஸ் எடுக்கிறதே பெரிய விசயம்னு உனக்கும் தெரியும்ல”

‘டேய் ஃபர்ஸ்ட் க்ரூப் எடுக்கணும்னா நல்ல ஸ்கோர் வேணும். ப்ளீஸ் நல்லா எழுதுடா’

எதுவும் பதில் பேசாமல் சிரித்தேன்.

‘எருமை பன்னி பிசாசு. சரி நேரம் ஆச்சு நான் உள்ள போறேன். நீயும் கிளம்பு’ என்றாள்.

அப்பொழுது ஏதேச்சையாக வித்யாவைப் பார்த்தேன். அவளும் என்னைப் பார்க்க அவளுக்கும் ‘Best of luck’ என்றேன்.

இதைப் பார்த்த நிலா ‘உங்களை வரச் சொன்னது எனக்கு வாழ்த்து சொல்ல மட்டும் தான். ஊர்ல இருக்கிற எல்லாருக்கும் இல்ல’ கோபித்துக் கொண்டாள்.

“நம்ம வித்யா தான?”

‘அப்படியா சரி அடுத்த எக்ஸாம்ல இருந்து நான் உங்க block வர்றேன்’

“என்னைய அலைய விட வேணாம்னு பார்க்கிறியா? சூப்பர்”

‘அப்படி இல்ல சார். நீங்க இங்க வந்து விதியாக்கு வாழ்த்து சொல்லுங்க. நான் போய் கௌதம்க்கு வாழ்த்து சொல்றேன். ஓகேவா?’

“சாரி. எக்ஸாம் முடிச்சிட்டு பார்க்கலாம். நல்லா பண்ணு” சொல்லிவிட்டு என் எக்ஸாம் ஹாலுக்கு விரைந்தேன்.

வந்து சேரும் போது மணி 10.05.

“excuse me sir”

‘you are late. not allowed inside’ என்று எக்ஸாம் சூப்பர்வைஸர் சொல்ல “சாரி சார். நான் இந்த ஸ்கூல் இல்ல. எக்ஸாம் ஹால் கண்டுபிடிச்சு வர நேரம் ஆயிடுச்சு” என்றேன்.

ஆனால் அவர் என்னை விட புத்திசாலி என்பதால் ‘உன் ஸ்கூல் பசங்க எல்லாரும் சரியான நேரத்துக்கு வந்துட்டாங்களே’ என்றார். உள்ளே இருந்து கார்த்திக்கும் அஷோக்கும் இப்ப என்ன சொல்லுவ என்பது போல என்னை பார்த்துக் கொண்டிருந்தனர்.

‘சார் முதல் பரீட்சை அதனால கோவிலுக்கு போயிட்டு வர்றேன். அடுத்த எக்ஸாம்ல இருந்து ஸ்கூல் பஸ்ல வருவேன் சார்’

‘சென்டிமென்ட்ல அட்டாக் பண்ணிட்டான் டா’ கார்த்திக் அஷோக்கிடம் சொன்னது எனக்கே கேட்டது. நல்ல வேளை அவருக்கு கேட்கவில்லை.

“கற்பக விநாயகர் கோவில் விபூதி எடுத்துக்கிறீங்களா சார்?”

‘இல்லை தம்பி வேணாம். நீ போய் எக்ஸாம் எழுது. நல்லா பண்ணு தம்பி. Answer sheet எடுத்துக்கோ. இந்தா question paper’ அவர் டோனே மாறியது.

“சாரி விநாயகா. சின்னதா பொய் சொல்ல வேண்டியது ஆயிடுச்சு” பாவமன்னிப்பு கோரிவிட்டு எழுத ஆரம்பித்தேன்.

எக்ஸாம் முடிந்ததும் எங்கள் கேங் மீட்டிங் ரொம்ப நாளுக்குப் பின் நடந்தது. என்னையும் நிலாவையும் விட நாங்கள் சேர்ந்தது மற்றவர்களுக்குத்  தான் மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. கார்த்திக்கும் அஷோக்கும் காலை எக்ஸாம் ஹாலில் நடந்த கூத்தை சொல்லி நாக்கள் அடித்துக் கொண்டிருந்தனர்.

‘அவர் மட்டும் விபூதி கேட்டிருந்தா இன்னும் கொஞ்சம் காமெடி ஆயிருக்கும்’ என்று என்னை கலாய்த்துக் கொண்டிருந்தான் அஷோக்.

அனைவரும் விடை பெற்றோம் வீட்டிற்கு. நிலா என்னிடம் வந்தாள் ‘அடுத்த எக்ஸாம்ல இருந்து சீக்கிரம் வா என்னைப் பார்க்க. என்னை மட்டும்’ அழுத்திச் சொல்லிவிட்டு அவளும் கிளம்பினாள்.

எக்ஸாம் என்றால் முன்பெல்லாம் பயமாக இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் நிலாவிற்கு All the Best சொல்வதற்காகவே எப்பொழுது எக்ஸாம் வரும் என்று காத்துக் கிடக்க ஆரம்பித்தேன். எல்லாம் எக்ஸாமிற்கும் நிலாவிடம் சிறிது நேரம் பேசிவிட்டு தான் சென்றேன். எந்த டென்சனும் இல்லாமல் எக்ஸாம் எழுதுவது போல உணர்ந்தேன். ஒரு வழியாக எக்ஸாம் எல்லாம் முடிந்தது.

விடுமுறை தொடங்கியது. எக்ஸாம் முடிந்த சந்தோசத்தில் எல்லாரும் இருந்தோம். இருந்தாலும் அடுத்து XIth தொடங்கும் வரை பார்த்துக் கொள்ள முடியாது என்ற சோகம் எல்லார் முகத்திலும் இருந்தது. ‘happy holidays’ சொல்லி எல்லாரும் விடை பெற்றோம்.

வழக்கம் போல நிலாவும் நானும் சைக்கிளை உருட்டிக் கொண்டே சென்றோம்.

“நிலா அடுத்து உன்னை எப்ப பார்க்க முடியும். ஸ்கூல் தொடங்கிற அன்னைக்குத் தானா?”

‘ஆமா டா. நான் ஊர்ல இருக்க மாட்டேன். கிராமத்துல இருக்கிற எங்க பாட்டி வீட்டுக்குப் போறேன் டா’

என் முகம் வாடிப் போனதை கண்டிப்பாக அவள் உணர்ந்திருப்பாள். அவளே பேச்சைத் தொடர்ந்தாள்.

‘நீ எங்கேயும் போகலையா டா?’

“இல்ல நிலா. இங்க தான் இருப்பேன். கிரிக்கெட் டிவின்னு பொழுதைப் போக்க வேண்டி தான்”

‘ஹ்ம்ம்’

“உன்னைப் பார்க்க அவ்வளோ நாள் காத்துட்டு இருக்கனுமா?’

‘என்னடா ஆச்சு உனக்கு?’

“தெரியல”

‘எல்லா லீவுக்கும் நான் ஊருக்குப் போறது தான டா. அப்ப எல்லாம் நார்மலா தான இருப்பா. இப்ப என்னாச்சு?’

“ஒன்னும் ஆகலையே நான் நல்லா தான் இருக்கேன்” சிரித்தேன் அவள் சிரிப்பதற்காக.

‘ரொம்ப கஷ்டப்பட்டு சிரிக்காத. சரி உனக்காக எக்ஸாம் ரிசல்ட் வர்ற அன்னைக்கு நான் திரும்பி வந்திடுறேன். நாம ரெண்டு பெரும் சேர்ந்து போய் ரிசல்ட் பார்க்கலாம் ஓகேவா?  சந்தோசமா?’

“ஏதோ கொஞ்சம்”

சிரிப்பு மட்டும் பதிலாய் அவளிடம் இருந்து.

‘சரி டா நான் கிளம்புறேன் அம்மா தேடுவாங்க’ புறப்பட்டுச் சென்றாள்.

“Miss you Nila” என்றேன்.

சிறிது தூரம் சென்றவள் என்னைத் திரும்பி பார்த்தாள் ‘ஏதோ சொன்ன மாதிரி இருந்தது என்ன டா?’ என்றாள்.

“Happy journey. Enjoy the Holidays. Have fun ன்னு சொன்னேன்” என்றேன்.

‘ஓ ஓகே. நன்றி டா. வேற ஏதும் சொல்லலையே நீ?’

“இல்ல நிலா”

‘நிஜமா வேற ஏதும் சொல்லல?’

“இல்ல நிலா”

‘ஹ்ம்ம். நீயும் என்ஜாய் பண்ணு. வெயில்ல விளையாடி ரொம்ப கறுப்பாயிடப் போற. ஏற்கனவே நீ ரொம்ப கலர் வேற :-P டாடா’ விடை பெற்றாள் சிரித்துக் கொண்டே.

சிறிது தூரம் சென்று மீண்டும் திரும்பி பார்த்தவள்,

‘Miss you too da’ என்றாள். 

உறங்கச் செல்கிறேன்….

1 comments:

Unknown said...

சிறிது தூரம் சென்று மீண்டும் திரும்பி பார்த்தவள்,

‘Miss you too da’ என்றாள். ///////

காதலர்களுக்கு மட்டுமே மெளன மொழி புரியும் :)... சூப்பர்....

Post a Comment