நீ மட்டும்
என் எழுத்துக்களை
வாசிப்பது இல்லை
என்று புலம்பிக்
கொண்டிருக்கின்றேன்....
நீ மட்டுமே
என் எழுத்துக்களில்
வசிப்பதை
உணராமல்....
கண்ணிமைக்குள் நீ கசிந்தாய்..!
-
கவிதையைப்
படித்திருந்தேன்
கண்களுக்குள்
நீ விரிந்தாய்..
வரிகளுக்குள்
புதைந்திருந்தேன்
வாஞ்சையாய்
நீ சிரித்தாய்..
காத்திருந்து
தவிக்கின்றேன்
கண்ணிமைக்கு...
5 weeks ago