Pages

Wednesday, September 29, 2010

காதல் பரிசு

எவ்வளவோ முகங்களை பார்க்கிறேன்
உன் முகம் பார்ப்பதோ
நிழற்படங்களில் மட்டுமே..

எத்தனையோ பேருடன் உரையாடுகிறேன்
உன் குரல் கேட்பதோ
திருட்டுத்தனமாய் பதிவு செய்த
நம் அலைபேசி
உரையாடல்களில் மட்டுமே..

உன்னுடன் வாழப் போகும்
கனவுகள் பல கண்டேன்
இப்பொழுது உன்னோடு வாழ்வது
கனவுகளில் மட்டுமே..

காலம் எனக்கு தந்தது
‘உன் காதல் என்ற பரிசை’
காதல் எனக்கு அளித்ததோ
‘உன் நினைவுகளில் வாழ்கின்ற
காலப் பரிசை’….

2 comments:

Unknown said...

உன்னுடன் வாழப் போகும்
கனவுகள் பல கண்டேன்
இப்பொழுது உன்னோடு வாழ்வது
கனவுகளில் மட்டுமே..///

கனவுகளில் வாழ்வதும் ஒரு தனி சுகம் தானே...


காலம் எனக்கு தந்தது
‘உன் காதல் என்ற பரிசை’
காதல் எனக்கு அளித்ததோ
‘உன் நினைவுகளில் வாழ்கின்ற
காலப் பரிசை'//////////

மனதில் வலி தரும் வரிகள் :(

Priya said...

oye.. hereafter dont tell u dono to write kavidhai.. romba cute n painful lines..

Post a Comment