Pages

Monday, October 14, 2013

கனவுகளைக் காதலிக்கிறேன் - 3

வித்யாவின் கூந்தலைப் பார்த்தவள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்த்தாள். என்ன சொல்வது!!!! வித்யாவின் கூந்தல் தோள்பட்டை வரை கூட நீடிக்கவில்லை.

‘இதுக்கு தான் இந்த பில்டப் கொடுத்தியா?’ என்றாள் நிலா.

“இப்ப முடியை கம்மி பண்ணிட்டா. அதுக்கு நான் என்ன பண்ண முடியும். எனக்கு நீளமா இருந்தா தான் பிடிக்கும்னு சொன்னா திரும்ப வளர்க்கப் போறா”

‘முதல்ல அவளுக்கு உன்னை அடையாளம் தெரியுதான்னு பார்ப்போம்’

“அவளே வந்து எங்கிட்ட பேசு
வா பாரு” என்றேன்.

'பார்க்க தான போறேன்' என்றாள்.

'முடி கம்மியா இருந்தா என்ன அவ அழகு தான்' என்றேன். என்னை முறைத்துவிட்டுச் சென்றாள் நிலா.

நான் வித்யாவையே பார்த்துக் கொண்டிருந்தேன் அவள் ஒரு முறையாவது என்னை பார்த்து விட மாட்டாளா என்று. ஏதோ ஒரு படத்தில் வந்தது போல 10 எண்ணுவதற்குள் என்னைப் பார்த்து விடுவாள் என்று எண்ண ஆரம்பித்தேன். 1000 வரை எண்ணியது தான் மிச்சம்….

இடைவேளையில் என்னிடம் வந்து பேசுவாள் என்று எதிர்பார்த்தேன். அவள் முன்னே இரண்டு மூன்று முறை நடந்து சென்றேன் வேண்டுமென்றே. ஆனால் என்னுடைய முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தன. இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நிலா என்னைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தாள். ‘போய் உன் இடத்துல உட்காருடா’ என்று கண்களால் சொன்னாள்.

மீண்டும் வகுப்பு தொடங்கியது. உணவு இடைவேளையும் வந்தது. நாங்கள் சாப்பிடப் போகத் தயாரானோம். அப்பொழுது திடீரென்று ஒரு குரல் ‘சூர்யா’ என்று.

இது வித்யாவின் குரல் தான். கண்டுபிடித்த பின்னும் தெரியாதபடி நிலா யாரோ என்னைய கூப்பிடுறாங்க என்றேன்.

‘யாரும் இல்லையே. வா சீக்கிரம் போகலாம் பசிக்குது’ என்றாள்.

“இல்ல யாரோ கூப்பிட்ட மாதிரி இருந்துச்சு. சரி வா போகலாம்” என்றேன்.

‘டேய் உன்னை எத்தனை முறை கூப்பிடுறது’ என்று என் முன்னே வந்து நின்றாள் வித்யா.

‘என்னை ஞாபகம் இருக்க இல்லையா சார்க்கு?’ என்றாள் வித்யா.

“உன்னை எப்படி மறப்பேன் வித்யா!!!!”

‘அப்புறம் எதுக்குடா எங்கிட்ட வந்து பேசல?’ லேசாக கோபித்தாள்.

“உனக்கு என்னை ஞாபகம் இருக்காதுன்னு நினைச்சேன்”

‘போடா புடலங்கா. உன்னை எப்படி மறப்பேன்? Missed you a lot’ என்றாள் வித்யா.

“Me too” என்று நான் சொல்ல வாய் எடுக்கும் முன் நிலா குறுக்கிட்டாள். ‘சூர்யா லன்ச்க்கு டைம் ஆச்சு. வா போலாம். வந்து பேசு உன் வித்யா கிட்ட’ என்றாள்.

நானும் சேர்ந்துக்கலாமா உங்க கூட என்று வித்யா கேட்க கண்டிப்பாக என்றேன். நிலா என்னை எரித்துக் கொண்டிருந்தாள் அவள் பார்வையால்.

நான் என் நண்பர்களை அறிமுகம் செய்தேன் வித்யாவிற்க்கு. ‘இது நிலா’ என்று நான் சொல்ல நிலா ‘சூர்யாவின் பெஸ்ட் பிரண்ட்’ என்றாள். ‘என்னைய விடவா’ என்றாள் வித்யா. “இவங்க ரெண்டு பேரையும் எப்படி சமாளிக்க போறேனோ” என்று மனதினுள் நினைத்துக் கொண்டேன்.

அடுத்து அஷோக் கார்த்திக்கையும் அறிமுகம் செய்தேன். அவர்களுடன் கை குலுக்கி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள் வித்யா. ‘வலியுது டா. தொடச்சுக்கோங்க’ என்றாள் நிலா அவர்கள் இருவரையும் பார்த்து. சாப்பிட்டு விட்டு க்ளாஸிற்கு வந்தோம்.

ஒரு வாரம் சென்றது. ஃபிஸிக்ஸ் கிளாஸ் நடந்து கொண்டிருந்தது. ஒரு அறிவிப்பு வந்தது பள்ளிகளுக்கு இடையிலான நடனப் போட்டி பற்றி. Solo dance, group dance பிரிவுகளில் நம்ம பள்ளியில் இருந்து கலந்துக்கனும் என்று.

நிலா என்னிடம் வந்தாள். ‘நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஆடுறோம். பேர் கொடுப்போம்’ என்றாள். அதே நேரம் வித்யாவும் ‘நம்ம கெமிஸ்ட்ரீ நல்லா இருக்கும். நாம ரெண்டு பேரும் ஆடலாம்’ என்றாள்.

'ஸ்கூல்ல யார்கிட்டனாலும் கேளு. எங்களோட physics chemistry maths biology பத்திலாம் சொல்லுவாங்க' என்றாள்.

'எவ்வளோ நாள் தான் இப்படி ஒரே முகத்தையே அவங்க பார்ப்பாங்க. பாவம் அவங்க. அதனால இந்த முறை நாங்க ஆடுறோம்' என்றாள் வித்யா.

‘நீ என் கூட தான ஆடப் போற என்று’ நிலா கேட்க ‘இல்ல என்னோட தான் ஆடுவான்’ என்று வித்யா பதில் சொல்ல “என்ன கொடுமை சரவணன் இது.. என்ன பதில் சொல்வது” என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன்….
 

உறங்கச் செல்கிறேன்….

1 comments:

Unknown said...

சுவாரஸ்யம்... அடுத்த பார்ட் நாளைக்கே போஸ்ட் பண்ணலாமே.. :)

Post a Comment