Pages

Friday, October 18, 2013

கனவுகளைக் காதலிக்கிறேன் - 4

எந்த பாட்டுக்கு ஆடலாம் சூர்யா?’ என்று வித்யா மீண்டும் கேட்க “வித்யா நாம இப்படி செய்தால் எப்படி?” என்றேன்.

‘எப்படி?’ என்றாள் நிலா.

‘அவன் எங்கிட்ட சொன்னான்’ என்றாள் வித்யா.

‘நாமன்னு நீ என்னையும் சேர்த்து தான சொன்ன?’ – நிலா.

“நீயும் தான் நிலா. நீ மட்டும் இல்லை கார்த்திக் அஷோக்கும் தான்” என்றேன்.

அப்படி என்ன திட்டம் என்று கார்த்திக்கும் அஷோக்கும் நுழைந்து கொண்டார்கள் இப்பொழுது.

“வித்யா, நிலா உங்களில் ஒருத்தர் கார்த்திக் கூட ஆடுங்க இன்னொருத்தர் அஷோக் கூட” என்றேன்.

‘ரெண்டு டீமையும் அனுப்புவாங்களா Interschool Competition க்கு?’ – வித்யா.

“அடிப்பாவி நாம பதிவு பண்ணா நம்மளை உடனே தேர்ந்தெடுத்ததிடுவாங்களா? நம்ம ஸ்கூல்ல இருந்து நிறைய டீம் பதிவு பண்ணிருப்பாங்க. முதலில் தகுதிச் சுற்று இருக்கும் பள்ளி அளவில்.  அதுல ஜெயிக்கிறவங்களை அனுப்புவாங்க’ என்றேன்.

‘ஓ அப்படியா!. சரி எனக்கு ஓகே. யாரு ஜெயிக்கிறாங்களோ எங்களுக்குள்ள அவங்க பெஸ்ட் டான்சர் என்று தெரிஞ்சிடும் நானா இல்ல நிலாவா என்று. அது போதும் எனக்கு’ என்றாள் வித்யா.

நான் வித்யா கூட ஆடுறேன் என்று கார்த்திக்கும் அஷோக்கும் போட்டி போட்டுக் கொள்ள ஆரம்பித்தார்கள். அல்பங்களா என்று நிலா தலையில் அடித்துக் கொண்டாள்.

‘எனக்கு இது ஓகே இல்ல. சூர்யா, உனக்கு தக்காளி முட்டை விக்கிறவங்க கூட கூட்டணி ஏதும் இருக்கா? என்ன இவனுங்களோட ஆட சொல்ற…. இவ்வளவு பெரிய ரிஸ்க் என்னால எடுக்க முடியாது’ என்றாள் நிலா.

கார்த்திக் அஷோக் இருவரின் முகமும் வாடிப் போனது. நிலா சொல்வது போல அவர்கள் இருவரும் மோசாமாக ஆடுபவர்கள் அல்ல.

‘நிலா என்னோட பயந்துட்டா போட்டி போட’ என்று வித்யா வம்பிழுத்தாள்.

‘நான் ஒன்னும் பயப்படலைடி. சரி வா நாம ரெண்டு பெரும் Solo dance ல் பதிவு பண்ணலாம். பார்க்கலாம் யார் ஜெயிக்கிறாங்க என்று’ கோபத்துடன் சொன்னாள் நிலா.

இப்படியே சென்றால் பெரிய சண்டை ஆகிவிடும் என்று நான் குறுக்கிட்டேன். “நண்பர்களே, நம்ம திட்டத்தை மாத்திடலாம். நமக்குள்ள எந்த சண்டையும் வந்திடக் கூடாது தனித்தனியா ஆடி. இப்ப என்ன உங்க ரெண்டு பேருல யாரு நல்ல ஆடுறீங்கன்னு தெரியனும். அவ்வளவு தான? நாங்க பார்த்து சொன்னா ஓகேவா இல்லை நடுவர்கள் சொன்னா மட்டும் தான் நம்புவீங்களா?’ என்றேன்.

‘எங்களுக்குள்ள யார் பெஸ்ட்ன்னு தெரியனும் அவ்வளோ தான். யாரு சொன்னாலும் ப்ராப்ளம் இல்லை’ என்றனர் நிலாவும் வித்யாவும்.

“அப்ப சரி. நீங்க ரெண்டு பெரும் சேர்ந்து ஆடுங்க. நீங்க ரெண்டு பெரும் சேர்ந்து வின்னரா இல்லையா என்று நடுவர்கள் பார்க்கட்டும். நாங்க 3 பெரும் உங்களில் யாரு பெஸ்ட்ன்னு சொல்றோம். இந்த டீல் ஓகேவா?” என்றேன்.

‘ஓகே’ என்றார்கள் இருவரும்.

தகுதிச் சுற்று வரும் வரை எந்த பிரச்சனையும் இருக்காது என்று தற்காலிக நிம்மதி வந்தது. நிலா வித்யா இருவரும் கிளம்பிச் சென்றனர்.

தகுதிச் சுற்று அன்று என்ன பண்ணப் போறேன் என்று தெரியலையே என்று நான் நினைத்துக் கொண்டிருக்கையில் அஷோக்கும் கார்த்திக்கும் நம்ம ஆட்டத்தை குறை சொன்ன நிலா சரியா ஆடலைன்னு சொல்லிடலாம் என்று பேசிக் கொண்டிருந்தனர். ‘அடப்பாவிங்களா! ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சனை. எல்லாவற்றையும் எப்படி சமாளிக்கப் போறேனோ!!! விடு சூர்யா அன்னைக்கு பார்த்துக்கலாம்’  என்று நானும் புறப்பட்டுச் சென்றேன் வீட்டிற்கு.

தகுதிச் சுற்று நாளும் வந்தது.
Solo dance ல் நானும், pair dance ல் நிலா வித்யாவும், Group Dance ல் நாங்கள்  ஐவரும் என்று எங்கள் நண்பர்கள் பட்டாளமே எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்றோம். வெற்றி பெற்றவர்களை அறிவித்ததும் வித்யாவும் நிலாவும் நேராக எங்களிடம் வந்தனர்.

‘எங்க ரெண்டு பேருல யாரு நல்லா ஆடினோம்?’ இருவரும்.

நிலாவைத் தான் சரியா ஆடவில்லை என்று கார்த்திக்கும் அஷோக்கும் சொல்லப் போகின்றனர் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவர்கள் இருவரும் நிலாவைப் பார்த்தார்கள். அவளைப் பார்த்ததுமே பயம் தொற்றிக் கொண்டது போல எதற்கு வம்பு என்று 'சூர்யா சொல்லுவான்' என்று எஸ்கேப் ஆகி விட்டார்கள்.

‘சொல்லு சூர்யா’ என்றாள் நிலா.

‘நான் தான நல்லா ஆடினேன்’ என்றாள் வித்யா.

“நீங்க ரெண்டு பேரும் ஆடினதற்கு பெயர் தான் டான்சா?’ என்றேன்.

என்னை இருவருமே கையில் கிடைத்த புக்கை எடுத்து அடிக்க ஆரம்பித்தார்கள்.

‘சொல்லு டா யாரு பெஸ்ட் என்று’ இருவரும் என்னை விடுவதாய் இல்லை.

ஏதாவது கதை சொல்லி எஸ்கேப் ஆகி விட வேண்டியது தான் என்று “நீங்க ரெண்டு பேரும் என் கண்கள் மாதிரி. எந்த கண்ணு நல்லா பார்க்குது என்று சொல்ல முடியுமா? முடியாதில்ல? அப்படித் தான் உங்க ஆட்டமும். நீங்க ரெண்டு பேருமே பெஸ்ட். அதான் நீங்க ஜெயிச்சீங்க” என்றேன்.

‘நல்லா எஸ்கேப் ஆகிற. வித்யாவே என்னை விட நல்லா ஆடினதா இருக்கட்டும். நம்ம டீம்ல எல்லாருமே ஜெயிச்சிட்டோம் அது போதும் எனக்கு’ என்றாள் நிலா.

‘இல்ல நிலா நீ தான் என்னை விட நல்லா ஆடின’ இது வித்யா.

இருவரும் மாறி மாறி அன்பு மழை பொழிய கார்த்திக்கும் அஷோக்கும் இருவருக்கும் குடை பிடித்தனர்.

ஒன்பதாம் வகுப்பு மிக சந்தோஷமாக சென்றது. பத்தாம் வகுப்பில் இப்படி ஒரு பெரிய குண்டு வந்து விழும் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. மற்றவர்களை விட என்னையும் நிலாவையும் தான் அது மிகவும் பாதித்தது.

பத்தாம் வகுப்பு மாணவர்கள் அட்டவணை வந்தது. நான் 'அ' பிரிவு என்றும் நிலா 'ஆ' பிரிவு என்றும் இருந்தது அதில்….



உறங்கச் செல்கிறேன்….

3 comments:

Unknown said...

😊 nice friends..!!!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது...நல்லது - நானும் உறங்கச் செல்கிறேன்...!

Unknown said...

சூப்பரா கதை எழுதுறீங்க :)

Post a Comment