Pages

Saturday, November 09, 2013

கனவுகளைக் காதலிக்கிறேன் - 7


நண்பனுக்கு,

நீ என்னை ரொம்ப நல்லா புரிந்து கொண்டவன் என்ற நம்பிக்கையோட இருந்தேன். ஆனால் அன்னைக்கு நீ என்னோட சண்டை போட்டதுல என்னோட நம்பிக்கை தவிடுபொடி ஆயிடுச்சு. அதாவது பரவாயில்லை அதுக்கப்புறமும் நான் உன்கிட்ட என்ன நடந்துச்சு என்று எடுத்துச் சொல்ல வந்தும் நீ கேட்கவே முடியாதுன்னு சொல்லிட்ட. அதனால தான் இப்படி லெட்டர் எழுத வேண்டிய நிலை வந்திடுச்சு.

அன்னைக்கு நீ லேப்ல இருந்த. நீ அப்ப தான் உள்ளே போனதா வித்யா சொன்னாள் அதனால நான் என் க்ளாஸிற்கு திரும்பப் போனேன் நீ எக்ஸாம் முடிச்சிட்டு வருவ என்று. உனக்காக காத்துக்கிட்டு இருக்கும் போது தான் கௌதம் வந்தான் என்னையும் சாப்பிடக் கூப்பிட்டான். நான் வரலை என்று எவ்வளவோ முறை சொல்லிப் பார்த்தேன் அவன் கேட்கவே இல்லை. ரொம்ப வற்புறுத்திட்டு இருந்தான். அதனால தான் நான் அவன் கூடப் போனேன். ஆனால், அப்ப நான் சாப்பிடல. அவன் கேட்டான் ஏன் சாப்பிடல என்று. நான் எப்பவும் உன்னோட தான் சாப்பிடப் போவேன்னு சொன்னேன். அவன் சாப்பிட்டு முடிச்சப்புறம் நாங்க ரெண்டு பேரும் திரும்ப க்ளாஸ்க்கு வந்திட்டு இருந்தோம் அப்ப தான் நீ எங்க ரெண்டு பேரையும் பார்த்த. தப்பா புரிஞ்சுக்கிட்ட. அப்பவே என்னை நீ பேச விட்டிருந்தா இவ்வளோ பெரிய சண்டை ஆயிருக்காது. பத்தாம் வகுப்பு முழுதும் நாம ரெண்டு பேரும் பேச முடியாதபடி ஆக்கிட்டா. வேற செக்ஷன் போட்டப்ப நான் எவ்வளோ ஃபீல் பண்னேன்னு உனக்கு தெரியும். ஒரே செக்ஷன்ல இருந்து நீ சண்டை போட்டிருந்தா கூட பரவாயில்லை. நான் எவ்வளோ கஷ்டபபடுறேன்னு தெரிஞ்சும் எப்படி உன்னால சண்டை போட்டு விட்டுட்டுப் போக முடிஞ்சதுன்னு தெரியல. உனக்கு தெரியுமா? நானும் அன்னைக்கு சாப்பிடல நீ சாப்பிடலைல:-(

இப்பவாது என்னைப் பற்றி உனக்கு நல்லா புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். உனக்காக காத்துக்கிட்டு இருப்பேன் எக்ஸாம் ஹாலுக்கு வெளியில். நான் பரீட்சை நல்லா எழுதுறது உன் கையில தான் இருக்கு. கிரிக்கெட் ஆடிட்டு டிவி பார்த்திட்டு இருக்காத லீவ்ல.. பரீட்சைக்கு நல்லா படி.

என்னடா லவ் லெட்டெர்ன்னு நினைச்சியா :-P படம் பார்த்து நீ ரொம்ப கெட்டுப் போய் இருக்க :-P

நட்புடன்,
நிலா


கடைசி  வரியை படித்ததும் எனக்கு சிரிப்பு தான் வந்தது. ஆனால் நிலாவை நான் புரிந்து கொள்ளாமல் இருந்தததை நினைத்து மிக வருந்தினேன். எவ்வளோ பெரிய முட்டாள்தனம் பண்ணிருக்கிறேன் என்று என் மேலே எனக்கு கோபம் வந்தது. முதல் பரீட்சைக்காக காக்க ஆரம்பித்தேன்.. அன்று தான் நிலாவை அடுத்து பார்க்க முடியும் என்பதால்.

இங்கிலீஷ் I பேப்பர் அன்று. ஸ்கூலுக்குச் சென்றேன். எக்ஸாம் சென்டர் வேறு ஒரு பள்ளியில் என்பதால் எங்கள் ஸ்கூலில் இருந்து பஸ்ஸில் நாங்கள் அனைவரும் செல்வதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அஷோக், கார்த்திக் இருவரையும் பார்த்தேன் பஸ் அருகில்.

“அசோக், வித்யா எங்க டா பஸ்ல இருக்காளா?”

‘அசோக், இவன் வித்யாவை தேடுறான்னு நினைக்கிறியா?’ என்றான் கார்த்திக்.

“டேய் வித்யாவைத் தான் டா” என்றேன்.

‘இங்கிலீஷ் I பேப்பர் மேல சத்தியம் பண்ணு நாங்க வித்யா எங்க இருக்கான்னு சொல்றோம்’ என்றான் அஷோக்.

அடப்பாவிங்களா. முதல் பரீட்சை
யையே ஊத்திக்க வச்சிடுவீங்க போலியே என்று “நிலா எங்க?” என்றேன்.

‘இதை முதலிலேயே கேட்க வேண்டி தான’ – கார்த்திக்

“அது வந்து….” என்ன சொல்வதென்று தெரியாமல் இழுத்துக் கொண்டிருந்தேன்.

‘விடு கார்த்திக் பாவம் அவன். எப்படி தேடுறான் பாரு. மச்சி நம்ம தமிழ் சார் இருக்கிறார்ல?’

“அவருக்கு என்னாச்சு டா அஷோக்?”

‘அவருக்கு எப்பவும் ஒன்னும் ஆகாது டா. அவர் பொண்ணுங்க எல்லாரையும் ஒரு பஸ்ல அனுப்பி விட்டுட்டாரு டா’

“அவருக்கு எதுக்கு டா இந்த வேலை?”

‘யாருக்கு தெரியும்!! ஒரு வேளை பசங்க பிக்னிக் போறோம்ன்னு நினைச்சிடுவாங்கன்னு அப்படி பண்ணிருக்கலாம் டா’ என்றான் கார்த்திக்.

“சரி வாங்க டா நாமளும் கிளம்புவோம்” என்றேன்.

‘தம்பி எங்க போறீங்க? உனக்கு பஸ் ஓட்ட தெரிஞ்சா கிளம்பலாம்’ – அஷோக்

“ஏன்டா????”

‘இந்த பஸ் எடுக்க வேண்டிய ட்ரைவர் நேத்து ஃபுல் அடிச்சிட்டு மட்டை ஆயிட்டாராம். இப்ப தான் தெரிய வந்தது. அதான் வேற ட்ரைவரை வர சொல்லிருக்காங்க. அவர் இன்னும் 15 நிமிஷத்துல வருவாரு’ – அஷோக்.

“டேய் நாம போய் சேருரதுக்கும் எக்ஸாம் ஹாலுக்கு போறதுக்கும் சரியா இருக்கும் போல. நான் நிலாவை மீட் பண்ணனும் டா” என்றேன்.

‘எக்ஸாம் முடிச்சிட்டு மீட் பண்ணலாம்ல’  என்றான் கார்த்திக்.

“இல்ல டா அதுக்கு முன்னால பார்த்தே ஆகணும். அவங்க ஹால் எது? தெரியுமா உங்களுக்கு?”

‘அவங்க Block C Third Floor கிளாஸ் ரூம் 307 நாம Block A Third Floor கிளாஸ் ரூம் 307. ரெண்டும் வேற வேற Block டா. அவளை
ப் பார்த்திட்டு திரும்ப நம்ம ஹாலுக்கு வர்றது கஷ்டம் டா. அதனால எக்ஸாம் முடிச்சிட்டு பாரு நிலாவை. எக்ஸாம் ஹாலுக்கு லேட்டா வந்த எக்ஸாம் எழுத விட மாட்டாங்க” என்றான் கார்த்திக்.

“நான் பார்த்துக்கிறேன் டா. வந்திடுவேன் சரியான நேரத்துக்கு” என்றேன்.

எங்கள் பேருந்து தன் பயணத்தை தொடங்கியது. எக்ஸாம் சென்டரை சென்று அடையும் போது மணி 9.55. எக்ஸாம் 10 மணிக்கு. என்ன செய்வது என்று தெரியவில்லை. நிலா எனக்காக காத்துக் கொண்டிருப்பாள்….


உறங்கச் செல்கிறேன்….

1 comments:

Unknown said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கடிதம் வாசித்த உணர்வு... சஸ்பென்ஸ் வைக்காம முடிக்கிறதே இல்லைல... :)

Post a Comment