சாதியை போற்றுவோம்!!
தினமும் என்னவளின் முகத்தைப்
பார்த்து எழ ஆசைப்பட்டவனை,
அடுத்து என்று பார்ப்போம்?
என்று ஏங்க வைத்ததற்கு.
என்னவளுடன் வாழும் கனவுகள்
பல்லாயிரம் கண்ட எனக்கு,
காலம் முழுவதும் அழும்படி
நனவைத் தந்ததற்கு.
என்னவள் தான் உலகம்
என்று இருந்த எனக்கு,
'தனிமை' என்ற புது
உலகைப் பரிசளித்ததற்கு.
தாய் தந்தையை விட
என் மேல் பைத்தியமாய்
பாசம் வைத்த என்னவளை
என்னிடமிருந்து பிரித்ததற்கு.
ஏன் பிறந்தோம்? ஏன் வாழ்கிறோம்?
என்று மட்டுமே என்னை
தற்பொழுது சிந்திக்க வைத்து
வாழ்வை நரகமாக்கியதற்கு.
இவை போல பல
நன்மைகளை நான் கேட்காமலேயே
எனக்களித்த சாதியே
உனக்கு தலைவணங்குகிறேன்.
மனித இனமே!, இத்தனை
வல்லமை கொண்ட சாதியை
என்றுமே விட்டுத் தரமாட்டோமாக!
சாதியை போற்றி வளர்ப்போம்!!
தினமும் என்னவளின் முகத்தைப்
பார்த்து எழ ஆசைப்பட்டவனை,
அடுத்து என்று பார்ப்போம்?
என்று ஏங்க வைத்ததற்கு.
என்னவளுடன் வாழும் கனவுகள்
பல்லாயிரம் கண்ட எனக்கு,
காலம் முழுவதும் அழும்படி
நனவைத் தந்ததற்கு.
என்னவள் தான் உலகம்
என்று இருந்த எனக்கு,
'தனிமை' என்ற புது
உலகைப் பரிசளித்ததற்கு.
தாய் தந்தையை விட
என் மேல் பைத்தியமாய்
பாசம் வைத்த என்னவளை
என்னிடமிருந்து பிரித்ததற்கு.
ஏன் பிறந்தோம்? ஏன் வாழ்கிறோம்?
என்று மட்டுமே என்னை
தற்பொழுது சிந்திக்க வைத்து
வாழ்வை நரகமாக்கியதற்கு.
இவை போல பல
நன்மைகளை நான் கேட்காமலேயே
எனக்களித்த சாதியே
உனக்கு தலைவணங்குகிறேன்.
மனித இனமே!, இத்தனை
வல்லமை கொண்ட சாதியை
என்றுமே விட்டுத் தரமாட்டோமாக!
சாதியை போற்றி வளர்ப்போம்!!
0 comments:
Post a Comment