Pages

Monday, July 19, 2010

காதலின்றி...

காதலை பற்றி யோசிக்காமல், பேசாமல், பார்க்காமல் ஒரு நாள் முழுவதும் காதலே இல்லாமல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். முடிவு மட்டும் செய்துவிட்டேன் ஆனால் எப்படி இருப்பது என்று தெரியவில்லை. ஒரு மணி நேரம் இஷ்டம் இல்லாமல் கஷ்டப்பட்டு "BGP" படித்தேன். முதல் பக்கத்தையே தாண்டவில்லை. டிவியில் இந்தியா-பாகிஸ்தான் லைவ் மேட்ச் வேறு ஓடிக் கொண்டிருந்தது. ஆனால், அதை என்னால் பார்க்க முடியாதே!! பார்த்தால் கிரிக்கெட் மீது உள்ள காதலால் பார்ப்பதாய் ஆகி விடுமே. வேறு ஒரு சேனலில் 'ஸ்பெயின்-ஜெர்மனி' football மேட்ச் இருக்க அதை பார்க்க ஆரம்பித்தேன். ஜெர்மனி கோல் அடிக்க, நான் கோல் என்று கூச்சலிட்டேன். ஆனால், நடுவரோ offside என்று சொல்லி கோல் இல்லை என்று அறிவித்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. போஸ்டுக்குள்ள அடித்தால் கோல் தான என்று எனக்குள் பேசிக் கொண்டேன். சரி offside பத்தி பிரெண்ட்ஸ் யார்கிட்டயாவது கேட்டு இன்னும் கொஞ்சம் நேரத்தை ஓட்டலாம் என்று ராஜாவுக்கு கால் செய்தேன். அவனோ "என்ன டா அதிசயமா இருக்கு நீ football பார்க்கிறாயா?" என்றான். நான் என்னுடைய ஒரு நாள் சபதத்தை சொன்னேன். அவனிடம் இருந்து கெட்ட வார்த்தை எதுவும் வரவில்லை. சின்னப் பிள்ளைக்கு சொல்வது போல 'offside' பற்றி விளக்க ஆரம்பித்தான். அரை மணி நேரம் விவரித்த பின்னும் எனக்கு விளங்கவில்லை. "அப்பா சாமி ஆள விட்டுடு" என்று சொல்லி கட் செய்துவிட்டான்.

நோட்புக்கில் ப்ரௌஸ் பண்ண ஆரம்பித்தேன். தினமும் பார்ப்பது தானே என்ன புதிதாய் இருந்து விடப் போகிறது? shut down பண்ணப் போகிற நேரத்தில் எங்கள் department இன் Mr.Perfect ஐ ஆன்லைனில் பார்த்தேன். சரி இவனோட பேசுவது மட்டும் தான் நான் காதலில் இருந்து தப்பிக்க ஒரே வழி என்று முடிவு செய்தேன். அவன் பெற்றோர் வைத்த பெயர் சரவணன். ஆனால், எங்கள் காலேஜுக்கு Mr.Perfect என்று தான் அவனை தெரியும். எதற்கு Mr.Perfect என்று நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. பேரிலேயே புரிந்திருக்கும். படிக்கிற வயசுல இருக்க வேண்டிய எல்லா நல்ல பழக்கமும் அவன்கிட்ட மட்டும் தான் பார்க்க முடியும். எல்லா professors க்கும் பிடித்த ஒரே மாணவன். "Mechanical Engineering" தான் அவனுக்கு உலகமே. காதலை பற்றிய படங்களை கூட பார்க்க மாட்டான்(காதல் படங்கள் பார்ப்பவர்கள் Mr.Perfect ஆக இருக்க முடியாது என்று நான் சொல்லவில்லை). இப்படிப்பட்ட Mr.Perfect ஐ கண்டிப்பாக ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் கடந்து தான் வந்திருப்போம்.

இன்றைக்கு நமக்கு ஒரு அடிமை சிக்கிவிட்டான் என்று அவனுடன் chat பண்ண ஆரம்பித்தேன்.

'Hello Mr.Perfect' என்று ping பண்ணினேன்.

"Hello cheater" என்று பதில் வந்தது.

'cheater ah!! cheater ah!! cheater ah!!' அதிர்ந்தேன். 'எதுக்குடா என்ன cheater ன்னு சொல்ற?'

"அப்புறம் என்ன Mechanical Engineerning படிச்சிட்டு இப்ப software ல குப்பை கொட்டுறல்ல? அதான் அப்படி சொன்னேன். நீ பண்ணது Mechanical Engineering க்கு துரோகம் தான?"

அவன் இன்னும் மாறவே இல்லை. Mechanical Engineering ஐ Mech என்று சொல்வது கூட அவனுக்கு பிடிக்காது. 'அப்படி எல்லாம் இல்ல சரவணன். Mechanical Engineers ம் software field ல ஜெயிக்க முடியும்னு நிரூபிக்க தான் நான் இந்த field ல இருக்கேன்' என்று சமாளித்தேன்.

"இந்த வாய் மட்டும் இல்லன்னா ஒரு பைசாவுக்கு கூட நீ தேரமாட்ட டா"

அட! என்ன இவனும் நம்மள கலாய்க்க ஆரம்பிச்சுட்டான் இவனையும் இந்த உலகம் கெடுத்திடுச்சா? மனதுக்குள் மிகச் சின்ன சந்தேகம் வந்தது. ரொம்ப damage ஆக வேண்டாம் என்று 'வொர்க் எப்படி போகுது சரவணன்?' என்று மட்டும் கேட்டேன்.

"ரொம்ப டைட்டா இருக்கு டா. CFD analysis பண்ணி ரிப்போர்ட் அனுப்புறது என்னோட வேலை. CFD analysis ஞாபகம் இருக்கா?"

CFD analysis பற்றிய theory தெரியவில்லை என்றாலும் அந்த 'CFD analysis' ஐ என்னால் எப்படி மறக்க முடியும்? இருந்தாலும் 'CFD analysis பத்தி கேள்விப்பட்டதே இல்லை டா. மறந்துட்டேன்னு நினைக்கிறேன்' என்றேன்.

"என்னது மறந்துட்டியா? கிளாஸ் கவனிச்சா தானடா ஞாபகத்துல இருக்கும். நீ தான் அன்னைக்கு உறங்கி நம்ம HOD கிட்ட மாட்டினியே. அவரு கூட உன்னை கழுத்தை பிடிச்சு தள்ளி விட்டாரே வெளிய. அதை கூட மறந்துட்டியா? தேதி கூட... hmm got it. ஆகஸ்ட் ஆறு டா"

அடப்பாவிங்களா நாம மறக்க நினைச்சாலும் இவனுங்க தேதியோட ஞாபகம் வச்சு இருப்பாங்க போலையே என்று நொந்து கொண்டேன். 'ஹ்ம்ம் ஹ்ம்ம்' என்று மட்டும் அனுப்பினேன்.

"அன்னைக்கு மட்டுமா? அதுக்கு அடுத்த வாரம் கூட நம்ம மேனகா மேடம் கிளாஸ்லயும்.."

அவன் முடிப்பதற்குள் குறுக்கிட்டேன். 'போதும்டா சாமி. ஏதோ முடிவோட தான் இருக்க போல' என்றேன்.

"cool man. சும்மா தான் கலாய்ச்சேன்"

'நீ ரொம்ப மாறிட்ட சரவணன்'

"ஹ்ம்ம் எஸ். எல்லாம் அவளால தான்"

'அவளா!!! யாரு உங்க அக்கா பொண்ணா?? அந்த நாலு வயசு வாலு தான?'

"இல்லை டா. இவா... இவளை பத்தி நிறைய சொல்லலாம்"

'டேய் நீ இன்னும் பேரைக் கூட சொல்லலைடா'

"சொல்றேன் டா. நம்ம வாண்டுக்கும், வாசனுக்கும் மட்டும் தான் இதை சொல்லி இருக்கேன் டா. நீ யார்கிட்டயும் இப்ப சொல்ல வேணாம் டா. நானே சொல்லிக்கிறேன். சரியா?"

'will keep it personal saravanan. நீ சொல்லு'

"சுருக்கமா சொல்றேன். அவ பேரு மோகனா டா. My school mate from class 6th to 12th. கிளாஸ்ல எப்பவும் 2nd topper. ரொம்ப brilliant ஆன பொண்ணு. அழகும் அறிவும் ஒரே இடத்துல இருக்காதுன்னு சொல்றதை பொய்யாக்க இந்த உலகத்துல பிறந்தவடா. அவளுக்குன்னு ஒரு திமிர் இருக்கும். அந்த திமிர், அலட்டலான பேச்சு தான் எனக்கு அவகிட்ட பிடிச்சதே. டிரெஸ்ஸிங்ல அவளுக்குன்னு ஒரு தனி ஸ்டைல் இருக்கு. அவளை அடிச்சுக்க முடியாதுடா. நல்ல வாயாடி. அப்பா அம்மான்னா அவளுக்கு உயிர்டா. எங்க அம்மா அப்பாவை கூட அவ பேச்சால மயக்கி வச்சிருக்கா என்றால் பாரேன்.."

'ஹ்ம்ம்..என்ன நடந்துச்சுன்னு சொல்லு சரவணன்'

"12th exams முடிஞ்ச அன்னைக்கு என்னை லவ் பண்றதா சொன்னாள். இந்த வயசுல வர்றது லவ் இல்லை just infatuation தான்னு சொன்னேன். அதுக்கு என்னால இன்னும் வெயிட் பண்ணி சொல்ல முடியும். இது நாள் வரை நீ என் கண்காணிப்புல இருந்த. அதனால தைரியமா இருந்தேன் எவளும் உன்னை நெருங்க முடியாதுன்னு. நீ Mechanical Engineering சேரப் போற. நீயும் நானும் வேற வேற fieldல ஜெயிக்கணும். அதனால தான் நான் fashion designer படிக்கப் போறேன். ரொம்ப பயமா இருக்கு வேற யாராவது உன்னை என்கிட்ட இருந்து பறிச்சிடுவாங்களோன்னு. அதான் இப்பவே சொல்றேன். உனக்கு வேற யாராச்சும் propose பண்ணாலும் என் ஞாபகம் தான் வரணும். I will wait for you என்று சொன்னாள். Don't waste your time ன்னு நான் சொல்லிட்டேன். நாங்க பிரிஞ்சோம்"

'...'

"நான் அவளை மறந்தே போய் இருந்தேன். இரண்டு மாசத்துக்கு முன்னால என்னோட ஸ்கூல் பிரெண்ட் கார்த்திக் என்னை மீட் பண்ண வந்திருந்தான் என் ஆபீஸ்க்கு. எப்படி டா உனக்கு என்னோட contact details கிடைச்சதுன்னு கேட்டதுக்கு மோகனா தந்தான்னு சொன்னான். மோகனா இன்னும் என்னை மட்டும் தான் நினைச்சிட்டு இருக்கான்னு சொன்னான். ஸ்கூல்ல எப்பவும் நான் தான் topper ஆக இருக்கணும்னு அவா எப்பவும் வேணும்னே சில questions தப்பா answer பண்ணுவாளாம். மோகனா என்னை லவ் பண்றது எங்க அக்காவுக்கு தெரியுமாம். அவங்க கூப்பிட்டு மிரட்டி இருக்காங்க நாங்க வேற சாதி என்பதால. அவா அவங்க அம்மாகிட்ட போய் அழுது இருக்கா, எப்படி மா நான் அந்த வீட்ல போய் இருக்கப் போறேன். அவன் அக்காவை பார்த்தலே நடுக்கம் வருதும்மா. சரவணனும் என்னை புரிஞ்சிக்கிற மாதிரி தெரியலை. நீங்க பார்க்கிற பையனை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று. அதுக்கு அவங்க அம்மா என்னடி லூசு மாதிரி பேசுற மனசுல ஒரு பையனை வச்சுட்டு எப்படி இன்னொருத்தர் கூட உன்னால வாழ முடியும். நீ தான் உன் லவ், வாழ்க்கைக்காக போராடனும். நீ ஆசைப்பட்ட வாழ்க்கை வேணும்னா சும்மா கிடைச்சிடுமா? என்ன ஆனாலும் சரி அந்த பையன் கூட தான் உன் வாழ்க்கை இருக்கணும்னு சொல்லி இருக்காங்க. இதை எல்லாம் என்கிட்ட சொல்ல கூடாது என்றும், எப்படியாவது என்னை துரத்தி துரத்தி லவ் பண்ண வைக்கிற ப்ளான்ல மோகனா இருக்கா என்று கார்த்திக் சொன்னான்."

'அப்புறம் என்னடா ஆச்சு. திரும்பவும் அவா தான் propose பண்ணாளா?'

இரண்டு நிமிஷம் டா. அவா கால் பண்றா பேசிட்டு வந்திடுறேன் என்று சொல்லிப் போனவன் பதினைந்து நிமிடங்கள் கழித்து வந்து தொடர்ந்தான்.

"இல்லை டா. என் மேல பைத்தியமா இருக்கிற என் மோகனாவை விட்டுட்டு நான் எதுக்கு வேற யாரு கூடவோ வாழனும்னு நான் 'Can you share your life with me' ன்னு சொல்லி அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தந்தேன் டா. அவா கண்ணுல அப்படி ஒரு சந்தோஷம் டா அன்னைக்கு"

'Awesome. நம்பவே முடியலை சரவணன். நீ...'

"இப்படி நிறைய ஆச்சரியங்கள் இருக்கிறது தான் லைப் டா. அவா என் லைப் ல வந்த பிறகு ஒவ்வொரு நொடியையும் அனுபவிக்கிறேன். வாழ்க்கையை புரிஞ்சுகிட்டேன். நான் ரசிக்கிறேன் டா என்னோட வாழ்க்கையை அவா கண்களால"

'great da. எப்ப கல்யாணம்? உங்க அக்கா ஒத்துக்கிட்டாங்களா?'

"வீட்ல சொன்னேன் அவா இல்லாம என்னால வாழ முடியாதுன்னு. வேற சாதின்னு பிரச்சனை வந்துச்சு. காதலிச்சா எங்க இருந்து தைரியம் வரும்னு தெரியலை டா. பிரிட்டிஷ் கிட்ட போராடி நம்ம தலைவர்கள் சுதந்திரமே வாங்கிட்டாங்க. நம்ம வீடு டா. அவங்கள்ட்ட போராடி சம்மதிக்க வைக்கிறது பெரிய விசயமா என்ன?"

சிரித்தேன்.

"கல்யாண தேதி முடிவானதும் நம்ம பிரெண்ட்ஸ் எல்லார்கிட்டயும் சொல்லலாம்னு இருக்கேன் டா. ஆனால், என்னால சொல்லாம இருக்க முடியலை. அதான் என்னோட நெருங்கிய பிரெண்ட்ஸ் கிட்ட உளறிடுறேன்"

'congrats டா. wish u a happy married life in advance. தங்கச்சி மோகனா கிட்டயும் சொல்லிடு"

போன் வந்தது. என்னடா chat பண்ணிட்டு இருக்கிறவன் கால் பண்றான்னு நினைத்துக் கொண்டே பேச ஆரம்பித்தேன். எதிர்முனையில் பயங்கர சிரிப்பொலி. சிரித்துக் கொண்டே பேச ஆரம்பித்தான். "நான் சொன்னதை எல்லாம் நம்பிட்டியாடா?" என்றான். 'என்னடா சொல்ற' என்றேன். "நாம காலேஜ் படிக்கும் போது ஏதாச்சும் படம் பார்த்துட்டு வந்து அந்த கதையை உல்டா பண்ணி என்கிட்ட எவ்வளோ படம் ஒட்டி இருப்ப. அதான் இந்த டைம் நான் சும்மா ட்ரை பண்ணிப் பார்த்தேன். போன்ல சொன்னா நானே சிரிச்சு காட்டிக் கொடுத்திடுவேன்னு தான் chat பண்ணேன். கண்டிப்பா நீ நம்ப மாட்டன்னு தான் நினைச்சேன். ஆனால், நீ எல்லாத்தையும் நம்பிட்ட. என்கிட்ட ஏமாந்த முதல் ஆள் நீ தான்டா. இதை வாண்டுக்கும், வாசனுக்கும் முதல்ல சொல்லணும்" என்று சொல்லி சிரித்துக் கொண்டிருந்தான். நானோ வாயடைத்துப் போய் இருந்தேன். "என்ன டா எதுவும் பேச மாட்டேங்கிற? ஏமாந்த சோகத்துல இருக்கியா... ஐயோ டைம் ஆச்சு டா. நான் போய் வேலை பார்க்கிறேன். ரிப்போர்ட் முடிக்கலை இன்னும். நைட் கால் பண்றேன் டா. bye" என்றான். 'bye' என்று முடித்தேன்.

'என்னக் கொடுமை சரவணன் இது' என்று என் தலையில் அடித்துக் கொண்டேன். என்னைய ஏமாத்த எவ்வளவோ வழி இருக்கும் போது எதுக்கு இன்னைக்கு இப்படி ஒரு காதல் கதையை நான் கேட்டேன். அதுவும் சொன்னது எங்க department Mr.Perfect சரவணன்.

என்னைச் சுற்றி நடப்பவை ஏதும் புரியாதவனாய் என்னையும் அறியாமல் காதலை பற்றி கிறுக்க ஆரம்பித்திருந்தேன்....

2 comments:

Unknown said...

nice :)

Priya said...

நான் ரசிக்கிறேன் டா என்னோட வாழ்க்கையை அவா கண்களால..
cute lines...

nice comedy also.. :)

Post a Comment