Pages

Friday, December 31, 2010

பிடித்த பத்து பெண்குரல் பாடல்கள் (தொடர்பதிவு)

என்னை இந்த தொடர்பதிவுக்கு அழைத்த தங்கை லாவண்யா அவர்களுக்கு நன்றிகள் பல. இந்த பத்துப் பெண் குரல் பாடல்கள் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றால் அது பொய். தங்கை பத்து பாடல்கள் தான் எழுத வேண்டும் என்று சொல்லியதால் பத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். இந்த பாடல்களை என் வாழ்வில் கிடைத்த மூன்று பொக்கிஷங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அவர்கள் யார் என்று தெரிய வேண்டுமா???? இங்கே செல்லுங்கள்.

சரி என்னைக் கவர்ந்த பத்துப் பாடல்களை பார்ப்போமா....


10. பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா

பத்தாவதாய் இருப்பதால் இந்த வரிசையில் தான் எனக்கு பாடல்கள் பிடிக்கும் என்பது தவறு. எனக்கு விவரம் தெரிந்த வயதில் இருந்து இந்தப் பாடல் தான் தாலாட்டுப் பாடல். என்னையும் என் தங்கையும் இந்தப் பாடலைப் பாடித் தான் உறங்க வைத்தார் என் அம்மா. ஜானகி பாடியது என்றாலும் என் மனதில் நிற்பது என் அம்மாவின் குரல் தான்....

எந்நாளும் நம்மை விட்டு போகாது வசந்தம்
தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்
தள்ளாடும் பூக்கள் எல்லாம் விளையாட அழைக்கும்
ஏதேதோ ஏழை மனம் நினைக்கும்

படம்: நீங்கள் கேட்டவை
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி
வரிகள்: வாலி

9. நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்

இந்தப் பாடலை பற்றி என்ன சொல்ல!!!! முதலில் எனக்கு பிடிக்காத பாடலாய் தான் இருந்தது. நம் மனதிற்கு ஒருவரை பிடித்துவிட்டால் அவர்களுக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அது நமக்கும் பிடிக்கும் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. இப்பொழுது தெரிந்திருக்க வேண்டும் இந்தப் பாடல் பிடித்ததற்கான காரணம்.


பெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு
என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு
இன்றல்ல நேற்றல்ல காலம்தோறும்
உன்னோடு பின்னோடும் காதல் நெஞ்சம்

படம்: அக்னி நட்சத்திரம்
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா

வரிகள்: வாலி

8. உப்பு கல்லு தண்ணீருக்கு

தாய்மை உணர்வுடன் உள்ள ஒரு காதல் என்பது தான் இந்தப் பாடல் என்னை மிகவும் கவரக் காரணம். பாம்பே ஜெயஸ்ரீ எனக்கு மிகவும் பிடித்த பாடகிகளில் ஒருவர். இந்தப் பாடலால் எனக்கு இந்தப் படமும் பிடிக்கும் என்பது கூடுதல் தகவல்.

கத்தியின்றி ரத்தமின்றி காயம்பட்டவள்
உன் கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மை அடைகிறேன்

கட்டில் உண்டு மெத்தை உண்டு ஆன போதிலும்
உன் பாசம் கண்டு தூங்கவில்லை எனது விழிகளே

படம்: கருப்பசாமி குத்தகைதாரர்
இசை: தினா
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
வரிகள்: யுகபாரதி

7. விடிகின்ற பொழுது தெரிந்திடுமா

இந்தப் பாடலில் வரும் ஹம்மிங் தான் என்னை முதலில் கவரக் காரணம். அடுத்து பாடல் வரிகள். பாடலில் உள்ள எல்லா வரிகளுமே மிக அருமை. யுவன் என்னைக் கவர்ந்தது இந்தப் படத்தின் பாடல்கள் மூலம் தான் என்று சொனனால் மிகையல்ல.

உன்னாலே எனக்குள் உருவான உலகம்
பூகம்பம் இன்றி சிதறுதடா
எங்கேயோ இருந்து நீ தீண்டும் நினைவே
எனை இன்னும் வாழ சொல்லுதடா

காட்டு தீ போல கண்மூடித்தனமாய்
என் சோகம் சுடர் விட்டு எறியுதடா
மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம்
வாய் பொத்தி வாய் பொத்தி கதறுதடா
யாரிடம் உந்தன் கதை பேச முடியும்
வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்

படம்: ராம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: மதுமிதா
வரிகள்: சினேகன்

6
. கண்ணாளனே எனது கண்ணை

இந்தப் பாடல் பிடித்ததற்கான காரணம் பற்றி அறிய ஒன்பதாவது பாட்டிற்குச் செல்லுங்கள். மிக அற்புதமான படமும் கூட. இந்த மாதிரி ஆயிரம் படம் வந்தாலும் நம்மவர்கள் திருந்த மாட்டார்கள். விடுங்க மணி சார், இவனுங்க எப்பவும் இப்படித் தான் அடிச்சுகிட்டே இருப்பாங்க.

என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
உன்னை இழந்துவிட்டால் எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை
இது கனவா இல்லை நினைவா
என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்
உன்னைப் பார்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்

படம்: பம்பாய்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்:
சித்ரா
வரிகள்: வைரமுத்து

5. மனம் விரும்புதே உன்னை

இந்தப் பாடல் பிடித்ததற்கான காரணமும்....


அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது

சட்டென்று சலனம் வருமென்று ஜாதகத்தில் சொல்லலயே
நெஞ்சோடு காதல் வருமென்று நேற்றுவரை நம்பலயே

படம்: நேருக்கு நேர்
இசை: தேவா
பாடியவர்: ஹரிணி
வரிகள்: வைரமுத்து

4. மன்மதனே நீ கலைஞன் தான்

இந்தப் பாடலை ஆண் பாடுவது போல தான் நான் எப்பவும் பாடுவேன். குறிப்பாக இந்த வரிகள்.... "எத்தனை பெண்களை கடந்து வந்தேன். எவளையும் பிடிக்கவில்லை. இருபது வருடம் உன்னை போல் எவளும் என்னை மயக்கவில்லை"


எத்தனை ஆண்களை கடந்து வந்தேன்
எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம் உன்னை போல் எவனும்
என்னை மயக்கவில்லை

நானும் ஓர் பெண்ணென

பிறந்த பலனை இன்றே தான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்த பின்
ஆண்கள் வர்க்கத்தை நானும் மதித்தேன்

அடிமை சாசனம் எழுதி தருகிறேன், என்னை ஏற்று கொள்ள

ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன், அன்பாய் பார்த்து கொள்ள

படம்: மன்மதன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: சாதனா சர்கம்
வரிகள்: சினேகன்

3. நினைத்து நினைத்து பார்த்தால்


பெண் குரலில் எனக்கு மிகவும் பிடித்த சோகப் பாடல். தனிமையில் இந்தப் பாடலைக் கேட்டால் கண் கலங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. இப்பாடலை கேட்கும் போதெல்லாம் மனதில் ஏற்படும் வலியை உணர்த்த வார்த்தைகள் என்னிடத்தில் இல்லை.


தோளில் சாய்ந்து கதைகள் பேச
நமது விதியில் இல்லை
முதல் கனவு போதுமே காதலா
கண்கள் திறந்திடு

படம்: 7/G ரெயின்போ காலனி
இசை: யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்: ஷ்ரேயா கோஷல்
வரிகள்: நா முத்துக்குமார்

2. மாலை நேரம் மழைத் தூறும் காலம்

என் தனிமையை ரசிக்க மிகவும் உதவும் பாடல் இது என்று தான் நான் சொல்லுவேன். இன்றும் நினைவிருக்கிறது சென்னையில் நைட் ஷிப்ட் முடிந்து திரும்புகையில் ஆபீஸ் கேபில் இரவு 12.45 மணிக்கு காற்றலையில் இப்பாடல் மிதந்து வந்தது. அந்த ஐந்து நிமிடத் தனிமை எனக்கு தந்த சுகம் என் வாழ்வில் மறக்க முடியாதது.

இது சோகம் னால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்

நாம் பழகிய காலம் பரவசம்
அன்பே...

உன் கரம் கோர்க்கையில்

நினைவு ஓராயிரம்

பின் இரு கரம் பிரிகையில்

நினைவு நூறாயிரம்..


காதலில் விழுந்த இதயம்

மீட்கமுடியதது..

கனவில் தொலைந்த நிஜங்கள்

மீண்டும் கிடைக்காதது..


ஒரு காலையில் நீ இல்லை

தேடவும் மனம் வரவில்லை

பிரிந்ததும் புரிந்தது

நான் என்ன இழந்தேன் என ...


படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: ஜி வி பிரகாஷ் குமார்
பாடியவர்: ஆண்ட்ரியா
வரிகள்: செல்வராகவன்

1. என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு


இது திரைப்பாடல் அல்ல. இருந்தும் பல வெள்ளித்திரைப் பாடல்கள் ஏற்படுத்தாத ஒரு உணர்வை இப்பாடல் எனக்குள் ஏற்படுத்தியது என்று தான் சொல்லுவேன்.


என்னிடத்தில் தேக்கிவைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வரத் தெரியவில்லை
காதலதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லியனுப்பு

யாரோ..

உன்காதலில் வாழ்வது யாரோ..
உன் கனவினில் நிறைவது யாரோ..
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ..
ஏனோ...
என் இரவுகள் நீள்வது ஏனோ..
ஒரு பகல் எனச் சுடுவதும் ஏனோ..
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ..

தொடர்: காதலிக்க நேரமில்லை
இசை: விஜய் ஆண்டனி

பாடியவர்: சங்கீதா
வரிகள்: தேன்மொழிதாஸ்

இவ்வளவு நேரம் மிகப் பொறுமையாக இந்த பதிவை வாசித்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்.


இந்தப் பதிவைத் தொடர நான் அழைக்க விரும்பும் நபர்,

1. ரேவா(ரேவா கவிதைகள்)

3 comments:

Priya said...

அனைத்து பாடல்களும் சூப்பர்.. நல்ல தேர்ந்தெடுப்பு... அழகான வரிகள்...

Unknown said...

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது

எத்தனை ஆண்களை கடந்து வந்தேன்
எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம் உன்னை போல் எவனும்
என்னை மயக்கவில்லை///////////

எனக்கு மிகவும் பிடித்த வரிகள் :)

முதல் பாடல் வாய்ப்பே இல்ல.. முதல்ல அம்மாவ பத்தின பாட்டு எழுதினது ரொம்ப நல்லா இருக்கு..

எல்லா பாடல்களுமே எனக்கு பிடித்த பாடல்கள் :)

இவள் பாரதி said...

ithil ulla pathu padlaklum unmaiyil enakkum pidithavai athilum thanagal kurippitirukkum varikalum decribtionum kooda.. vaazthukal..makizchi

Post a Comment