Pages

Tuesday, February 02, 2010

நானும் வந்துட்டேன்!!!

என்னுடைய முதல் பதிவு. வலைப் பதிவு உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்த போதே என்னுடைய முதல் பதிவில் எனக்குப் பிடித்த பாடல் வரிகளை குறிப்பிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். இதோ எனக்கு மிகவும் பிடித்த வரிகள்,

எங்கேயோ உன் முகம் நான் பார்த்த ஞாபகம்..
எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்..

எதற்கு குறிப்பாக இந்த இரண்டு வரி என்று என்னைக் கேட்காதீர்கள். நம் மனதிற்கு என்ன பிடிக்கின்றதோ அதைச் செய்ய வேண்டும் என்று விரும்புபவன் நான். நிறைய விஷயங்கள் அப்படி நடப்பது இல்லை. விதி என்று கூறிவிடுகின்றனர். இந்த வலைப் பதிவிலாவது எனக்குப் பிடித்தமானவற்றை செய்து கொள்கிறேனே. நான் சொல்வது சரி தானே??

நான் வலைப் பதிவு உருவாக்க காரணம் இது மட்டும் தான். சரி சரி முதல் பதிவிலேயே நிறைய மொக்கை போட விரும்பவில்லை. அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

0 comments:

Post a Comment