மழலைப் பருவத்தில்
அம்மா காண்பித்து பால் சோறு
ஊட்டிய, வானத்து நிலவை
பிடிக்க முயற்சித்தேன்.. முடியவில்லை..
இன்றும் அதே நிலைமை தான்..
என்ன...
ஒரே ஒரு சின்ன வித்தியாசம்..
இன்று பிடிக்க முயன்று தோற்றுக் கொண்டிருப்பது
வானமே வியக்கும் எந்தன் நிலவை..!
உன் அத்தையோடு சண்டை
போடுகிறேன்..
உலகில் ஒரு நிலவு தான்
உள்ளது என்று
கைக் குழந்தையாய் இருக்கும் போது
என்னிடம் பொய் சொன்னதற்கு..
Thursday, February 04, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment